Home
News

அரசு வழங்கும் E-pass: ஊரடங்கில் அரசு அனுமதியோடு பயணம் செய்யலாம்- இதோ வழிமுறை!

கொரோனா ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்களின் அத்தியாவசிய பயணத்திற்காக அரசு வழங்கும் இ-பாஸ் வழங்கும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள்

மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள்

கொரோனா பரவாலம் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக பிரதமர் மோடி மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டு அறிவித்தார்.

அத்தியாவசிய தேவைக்கு ஏற்ப அரசு பல்வேறு நடவடிக்கை

அத்தியாவசிய தேவைக்கு ஏற்ப அரசு பல்வேறு நடவடிக்கை

இதையடுத்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கு ஏற்ப அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அரசு அனுமதியோடு பயணிக்க இ-பாஸ் வழங்கி வருகிறது. அதன் வழிமுறைகளை பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம், மருத்துவ பரிசோதனைகளுக்கு வெளியூர் செல்ல, தமிழக அரசு அனுமதியளித்தது. அனுமதி கடிதம்மாவட்டத்துக்குள் செல்ல தாசில்தாரிடம், வேறு மாவட்டங்களுக்கு செல்ல கலெக்டரிடமும் அனுமதி கடிதத்தை பொதுமக்கள் பெற்றனர்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு

அனுமதி கடிதம் பெற மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, நேரில் அனுமதி கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டு, 'ஆன்லைன்' மூலம், விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த வாரம் அமலுக்கு வந்தது.

 திருமணம், துக்க நிகழ்வு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய விஷயங்களுக்கு

திருமணம், துக்க நிகழ்வு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய விஷயங்களுக்கு

இதையடுத்து திருமணம், துக்க நிகழ்வு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய விஷயங்களுக்கு பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும். அப்படி பயணிக்கும் மக்களுக்கு அனுமதி வழங்க உள்ளது. அதை பெரும் வழிமுறைகளை பார்க்கலாம்.

கீழே லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது

கீழே லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது

இணைப்பை கிளிக் செய்து தங்களது தொலை பேசி எண்ணை கிளிக் செய்யவும்

உடனடியாக பதிவு செய்த எண்ணிற்கு ஓடிபி எண் வரும் இதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்

அதில் மின்நுழைவு சீட்டு அதாவது E-pass-க்கான விண்ணப்பம் தோன்றும். அதை கிளிக் செய்து பூர்த்தி செய்யவும்

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்பிக்க வேண்டும்

அலுவலர் தங்களது பரிந்துரையை பார்த்து ஆய்வு செய்வார்

அலுவலர் தங்களது பரிந்துரையை பார்த்து ஆய்வு செய்வார்

இந்த விண்ணப்பம் பூர்த்தி செய்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலர் தங்களது பரிந்துரையை பார்த்து ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்து பின் பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வந்திருக்கும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இ - பாஸ் பெறுவதற்காக அடிப்படை காரணங்கள்

இ - பாஸ் பெறுவதற்காக அடிப்படை காரணங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது, இ - பாஸ் பெறுவதற்காக அடிப்படை காரணங்களை கூறி விண்ணப்பிக்கலாம். மாவட்ட நிர்வாகம் விண்ணப்பத்தை பரிசீலித்து, அனுமதி வழங்கி, 'லிங்க்'கை மொபைல் போனுக்கு அனுப்பும். அதை, பொதுமக்கள் ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தகவலின்படி, இந்த செயலி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க வசதியாக ஒரு இ-பாஸாக பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த முழுத் தகவல் கிடைக்கவில்லை இருப்பினும் கீழ உள்ள தனி லிங்க் மூலம் இ-பாஸ் பெறலாம். லிங்க்- https://epasskki.in/

Best Mobiles in India

English summary
Corona lockdown: Application for e-Pass to Travel during Curfew, emergency
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X