ஜனவரி 15 அட்டகாசமாக வெளியாகும் கூல்பேட்.!!
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான கூல்பேட், இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகின்றது என்று தான் கூற வேண்டும். இந்திய சந்தையில் நிலையான இடத்தை பிடிக்க அந்நிறுவனம் புதிய வழிமுறைகளை பின்பற்றி வருகின்றது எனலாம்.
அதன் படி அந்நிறுவனத்தின் புதிய கருவி மற்றும் அதன் வெளியீடு சார்ந்த தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

அக்டோபர்
கூல்பேட் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிக சிறப்பம்சங்களை கொண்ட நோட் 3 எனும் ஸ்மார்ட்போனினை வெளியிட்டது.

கைரேகை ஸ்கேனர்
ரூ.8,999 விலையில் ஃபிங்கர்ப்ரின்ட் சென்சார் எனப்படும் கைரேகை பதிவு செய்யும் வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியீடு
தற்சமயம் அந்நிறுவனம் இந்திய சந்தையை அதிர வைக்கும் விதமாக புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கின்றது.

ஜனவரி
ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் அறிமுக விழாவிற்கு கூல்பேட் நிறுவனம் அழைப்பிதழ்களை வழங்க துவங்கி விட்டது.

ரகசியம்
இவ்விழாவில் வெளியிடப்பட இருக்கும் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை தொடர்ந்து அந்நிறுவனம் ரகசியமாகவே வைத்திருக்கின்றது.

கருவி
கூல்பேட் தரப்பில் இருந்து கிடைத்த ரகசிய தகவல்களின் படி கூல்பேட் நோட் 3 கருவிக்கு துணையாக ஒரு கருவியை அந்நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்
இந்த கருவியில் கைரேகை ஸ்கேனர் மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இயங்குதளம்
மேலும் இந்த கருவியில் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளமும் அந்நிறுவனத்தின் சொந்த யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கலாம்.
வெளியாக இருக்கும் கருவியின் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள ஜனவரி 15 ஆம் தேதி வரை காத்திருப்பதை தவிற வேறு வழியே கிடையாது.


Click it and Unblock the Notifications