சீனாவில் பதற்றம் : வானத்தில் 'மிதக்கும் நகரம்', கேமிராவில் பதிவு..!

|

இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று வாயால் சொன்னால் இந்த உலகம் நம்பாது - சாட்சி வேண்டும். சாட்சி இருந்தால் பொய் ஒன்றை கூட உண்மை ஆக்கி விடலாம் என்கிற போது, உண்மையை நிரூபிப்பது என்பதொன்றும் பெரிய கடினம் அல்ல.

அப்படியாக, சமீபத்தில் சீனாவில் உள்ள ஜியான்ங்க்ஷி மற்றும் போஷன் ஆகிய இரண்டு நகரங்களின் வான் பகுதியிலும் தோன்றிய 'மிதக்கும் நகரம்' சீன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..!

மக்கள் சாட்சி :

மக்கள் சாட்சி :

'மிதக்கும் நகரம்' வானத்தில் தோன்றிய அந்த காட்சியை கண்டதாக ஆயிரக்கணக்கான மக்கள் சாட்சி கூற, அந்த காட்சியானது கேமிராவில் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

மிதக்கும் நகரம் :

மிதக்கும் நகரம் :

பதிவான அந்த காட்சியில் வானத்தில் மாபெரும் நகர அமைப்பு போன்ற ஒன்று பெரிய பெரிய கட்டிடங்களுடன் வானத்தில் மிதப்பது போல் காட்சியளிக்கிறது.

யூட்யூப் :

யூட்யூப் :

இந்த காட்சி யூட்யூப்பில் பதிவேற்றம் செய்த பின்னர் உலகம் முழுக்க தீயாய் பரவியுள்ளது மிதக்கும் நகரம் வீடியோ..!

சதி கோட்ப்பாட்டாளர்கள் :

சதி கோட்ப்பாட்டாளர்கள் :

மேலும் உலகம் முழுவதிலும் உள்ள சதி கோட்ப்பாட்டாளர்கள் இந்த மிதக்கும் நகரம் குறித்த தங்களது விளக்கத்தினை அளித்த வண்ணம் உள்ளனர்.

வீடியோ :

கேமிராவில் பதிவான மிதக்கும் நகரம் வீடியோ..!

நாசாவின் ரகசிய திட்டம் :

நாசாவின் ரகசிய திட்டம் :

இது போன்ற மாயத் தோற்றத்திற்கு காரணம் நாசாவின் ரகசிய திட்டங்களில் ஒன்றான ப்ராஜக்ட் ப்ளூ பீம் (Project Blue Beam) என்கிறார்கள் சில சதி கோட்ப்பாட்டாளர்கள்.

இல்லுஷன் காட்சி :

இல்லுஷன் காட்சி :

அதாவது சுருக்கமாக, இல்லாத ஒன்றை இருப்பது போல் கண்களுக்கு தோன்ற வைக்கும் இல்லுஷன் (Illusion) காட்சிகளை உருவாக்கம் செய்தல் தான் - ப்ராஜக்ட் ப்ளூ பீம் ஆகும்.

ஏலியன்கள் :

ஏலியன்கள் :

மேலும் சில சதி கோட்ப்பாட்டாளர்கள், இது உலகில் தோன்றியது அல்ல, வேறு ஒரு கிரகத்தில் இருந்து வேறு ஒரு கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஒன்று, என்றும் விளக்கம் அளிக்கின்றனர்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

கடல் மட்ட உயரம் 8 அடி உயரும்.! கடலோர நாடுகள் நிச்சயம் அழியும்.!

கடல் மட்ட உயரம் 8 அடி உயரும்.! கடலோர நாடுகள் நிச்சயம் அழியும்.!

கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு, எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் இன்னும் கூட எடுக்கப்படவில்லை என்றால், உலக கடல் மட்டம் நிச்சயம் 2100 ஆம் ஆண்டில் எட்டு அடிக்கு உயரும் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில், 2300 ஆம் ஆண்டில் நிச்சயம் 50 அடிக்குக் கடல் மட்டம் உயர்ந்து கடலோர நாடுகள் கடலுக்குள் மூழ்கி அழியும் நிலை உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை

அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை

இந்த மாதம் துவக்கத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளங்களின் வருடாந்த விமர்சனம் நிகழ்ச்சியில், ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டன் கல்லூரி சார்பில் இந்த அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2100 நிச்சயம் பேர் ஆபத்து

2100 நிச்சயம் பேர் ஆபத்து

அந்த அறிக்கையின்படி 2100 ஆம் ஆண்டில் நிச்சயம் பேர் ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட கடல் மட்ட உயர்வின் அளவை வைத்து, கணக்கிட்டுப் பார்த்தபோது, உலக மக்களின் எதிர்கால நிலை பேர் ஆபத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராபர்ட்.ஈ.கோப்

ராபர்ட்.ஈ.கோப்

உலகெங்கிலும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு, ஆபத்து நிச்சயம் கடல் மட்ட உயர்வினால் தான் நிகழப்போகிறது என்று பூமி, பெருங்கடல், மற்றும் வளிமண்டலவியல் அறிவியல் ஆராய்ச்சி மண்டலத்தின் இயக்குனர் ராபர்ட்.ஈ.கோப், பத்திரிகை கலந்தாய்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆபத்தை ஏற்படுத்தும் உண்மை

ஆபத்தை ஏற்படுத்தும் உண்மை

உலக மக்கள் தொகையில் பதினொரு சதவிகிதம், கடல் மட்டத்தின் 33 அடிக்கு மேல் தான் வாழ்கிறது, இதன் பொருள் இவர்களுக்குச் சிறிய கடல் மாற்றம் கூட பெரும் ஆபத்தை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கை நிலையைப் பாதிப்படைய செய்யும் என்பதே உண்மை.

கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு காரணம்

கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு காரணம்

இருப்பினும், உமிழ்வுகள் குறைவாக இருந்தால், விளைவுகளும் பாதிப்புகளும் குறைவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தற்போது வரை கணக்கிடப்பட்ட மிதமான உமிழ்வு மதிப்பீட்டை வைத்து கணக்கு செய்து பார்த்தால் 2100 ஆம் ஆண்டில் கடல் மட்டம் 1.4 முதல் 2.8 அடி வரை உயரும் என்று தெரியவந்துள்ளது.

அழிவுகளைச் சமாளிக்க நாம் தயாராக வேண்டும்

அழிவுகளைச் சமாளிக்க நாம் தயாராக வேண்டும்

அதனைத் தொடர்ந்து 2150 ஆம் ஆண்டில் 2.8 முதல் 5.4 அடி வரையும், 6 முதல் 14 அடி வரை கடல் மட்டம் உயர்ந்து உலகில் பத்தி நாடுகள் கடலுக்கும் மூழ்கி அழிந்துவிடும் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் தாக்குதலால் ஏற்பட இருக்கும் அழிவுகளைச் சமாளிக்க நாம் தயாராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்' விவசாயி நிலத்தில் கிடைத்த விண்கல்.!

'அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்' விவசாயி நிலத்தில் கிடைத்த விண்கல்.!

மிச்சிகன்: அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரத்தில் அறிய வகை விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல், உலகின் ஆறாவது மிகப் பெரிய விண்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிய வகை விண்கல்லின் மதிப்பு சுமார் 74 லட்சத்திற்கும் மேல் இருக்குமென்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிய வகை விண்கல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மேற்கட்ட ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

விவசாயி நிலத்தில் விண்கல்

விவசாயி நிலத்தில் விண்கல்

மிச்சிகன் பகுதியில் வசிக்கும் டேவிட் மாசுரேக் என்ற விவசாயின் நிலத்தில் தான் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டேவிட் மாசுரேக், இந்த நிலத்தை விவசாயத்திற்காக 1988 இல் வாங்கியதாகத் தெரிவித்திருக்கிறார்.

 30 ஆண்டு

30 ஆண்டு

இந்த விண்கல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக டேவிட் இன் வாசல் படி அருகே, வெறும் தடுப்பு கல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான் கூடுதல் சுவாரசியம். சிறு தினங்களுக்கு முன்பு தான் தோட்ட வேலைக்காகக் கற்களை இடம் மற்றும் பொது இதன் வடிவம் வித்தியாசமாக இருப்பை உணர்த்த டேவிட் அருகில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

74 லட்சம் விண்கல்

74 லட்சம் விண்கல்

23 பவுண்ட் எடை கொண்ட விண்கல்லை, மிச்சிகன் பல்கலைக்கழத்தில் உள்ள புவியியலாளர் மோனா சர்பிஸ்கு ஆய்வு செய்து, அது உண்மையான விண்கல் என்பதை உறுதி செய்து டேவிட் இடம் தெரிவித்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 74 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறியுள்ளார்.

1930ஆம் ஆண்டு பூமிக்கு வந்துள்ள விண்கல்

1930ஆம் ஆண்டு பூமிக்கு வந்துள்ள விண்கல்

இந்த அறிய வகை விண்கல்லில் இரும்பு மற்றும் நிக்கல் துகள்கள் அதிகம் உள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விண்கல் 1930ஆம் ஆண்டில் பூமிக்கு வந்துள்ளது என்ற தகவல்களுடன் அடுத்த கட்ட ஆய்வுகளில் ஏதேனும் அறிய வகை புது கூறுகள் கண்டுபிடிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை

மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை

டேவிட் இந்த விண்கல்லை விற்று, அதில் வரும் பணத்தில் பாதியை மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை தரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
சீனாவின் வான் பகுதியில் தோன்றிய மிதக்கும் நகரம். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X