காயின்ஸ்விட்ச் பயன்பாட்டில் வந்த யுபிஐ- இந்தியாவில் யுபிஐ மூலம் பிட்காயின் பரிமாற்றமா?
யுபிஐ பயன்பாடு என்பது தற்போதைய காலத்தில் அனைவரும் அறிந்ததே. யுபிஐ நிகழ்நேர கொடுப்பனவு முறையை இயக்கும் என்பிசிஐ இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை தடை செய்ய மறுத்துவிட்டது. மேலும் வங்கிகள் தங்கள் சொந்த வழிகாட்டுதல்களை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

பிட்காயின் அல்லது கிரிப்டோ நாணயங்கள்
பிட்காயின் அல்லது கிரிப்டோ நாணயங்களை விற்கவும் CoinSwitch Kuber தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தளத்தை பயன்படுத்தும் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நல்ல செய்திகளும் இருக்கின்றன. அதாவது அதில் யுபிஐ கொடுப்பனவு விருப்பம் பயனர்களுக்கு இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது யுபிஐ கட்டணக் கையாளுதல்களை பயன்படுத்தி நாணய ஸ்விட்ச் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்ய இந்த பயன்பாடு அனுமதிக்கிறது.

யுபிஐ முறை
யுபிஐ என்பது பண பரமாற்ற முறையாக இருந்து வருகிறது. இது இந்தியாவில் அமைந்துள்ள வங்கிகளிடம் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவையும் பெறுகிறது. இந்த பயன்பாடானது காயின்ஸ்விட்ச், வேஜிர்எக்ஸ், ஜெப் பே உள்ளிட்ட பயன்பாடுகளிடம் இருந்து பேடிஎம் வங்கி ஆதரவை திரும்பப் பெற்றது. காரணம் கிரிப்டோ கரன்சி பரிமாற்றம் அனுமதி என கூறப்படுகிறது.

பேடிஎம் வங்கி சேவை ஆதரவு
பேடிஎம் வங்கி சேவை ஆதரவை திரும்பப் பெற்ற பிறகு, காயின் ஸ்விட்ச் ஐடிஎஃப்சி வங்கிக்கு மாற்றப்பட்டது. இதன்பின் யுபிஐ கொடுப்பனவுகள் அதிகரிக்கத் தொடங்கின. தற்போது காயின்ஸ்விட்ச் கிரிப்டோ நாணயங்களை வாங்கும் சேவையை அனுமதிக்கிறது. யுபிஐ பயன்பாடு குறித்து பார்க்கையில், இதில் கூகுள் பே, போன்பே, பீம், பேடிஎம் ஆகியவைகளும் உள்ளடக்கம்.

யுபிஐ எண் உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும்
இந்த சேவை பயன்பாடு விரும்பினால் ஆப்பிள் ஐபோன், ஆண்ட்ராய்டு பயனர்கள் பெற விரும்பினால், காயின்ஸ்விட்ச் பயன்பாட்டில் யுபிஐ ஐடியை உள்ளிட வேண்டும். கூகுள்பே, போன் பே போன்ற பண பரிவர்த்தனைகள் பயனர்களுக்கு முன்னதாகவே யுபிஐ ஐடி உருவாக்கப்பட்டிருக்கும். அது ----------@okhdfcbank போன்றதாக இருக்கும். அதை உள்ளிட வேண்டும். அதன்பின் ஓப்பன் செய்யும் போது கட்டணத்தை ஏற்றுக் கொண்டு உள்ளே நுழைய வேண்டும். இதன்பின் நீங்கள் காயின்ஸ்விட்ச் பயன்பாட்டை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட சமயங்களில் இதற்கு தாமதமாகலம் என கூறப்படுகிறது.

பேடிஎம் வங்கி சேவைகளை பயன்படுத்திய காயின்ஸ்விட்ச்
பேடிஎம் வங்கி சேவைகளை பயன்படுத்திய காயின்ஸ்விட்ச், கிரிப்டோகரன்ஸி சேவை பயன்படுத்துவதாக அறிவித்ததையடுத்து பேடிஎம் ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதையடுத்து ஐடிஎஃப்சி சேவை ஆதரவு பெறப்பெற்றது. மேலும் கடந்த மாதம் யுபிஐ., இந்தியாவில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை தடை செய்ய மறுத்துவிட்டது. மேலும் கிரிப்டோகரன்ஸிகளை உள்ளடக்கிய முறையான வழிகாட்டுதல்களை உருவாக்கும்படி வங்கிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

24 மணிநேரமும் பண பரிமாற்றம்
மொபைல் போன் மூலமாக தங்களது வங்கி பயன்பாட்டில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் செலுத்தும் செயலுக்கு யுபிஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி யுபிஐ பயன்பாடானது 24x7 என்ற அடிப்படையில் செயல்படுவதால் இந்த சேவைக்கு ஏணையோர் ஆர்வம் தெரிவிக்கின்றனர். இந்த சேவையானது ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளின் ஆதரவோடு செயல்படும் லாபநோக்கமற்ற அமைப்பாக இருக்கிறது. வங்கிகள் குறிப்பிட்ட நேரங்களில் பண பரிமாற்றம் செய்து வரும் நிலையில் வாரத்தில் ஏழு நாட்கள் 24 மணிநேரமும் பண பரிமாற்றம் என்ற சேவை பெரிதும் வரவேற்கப்பட்டது.

கிரிப்டோ பரிமாற்ற சேவை
அதுமட்டுமின்றி யுபிஐ (யூனிஃபட் பேமென்ட் இன்டர்ஃபேஸ்) பரிவர்த்தனைகளில் கிரிப்டோ பரிமாற்ற சேவைக்கு இந்தியாவில் எந்த மாதிரியான அணுகல் கிடைக்கும் என தெரியவில்லை. இருப்பினும் வெளியான தகவலின்படி இந்தியாவில் யுபிஐ அறிவிப்புக்கு பச்சைக் கொடி தூக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூறப்படுகிறது.
Source: news18.com


Click it and Unblock the Notifications