பேடிஎம் நிறுவனரை 20 கோடி கேட்டு மிரட்டிய பெண் உட்பட 3 பேர் கைது.!
இணைய பணப் பரிவர்த்தனையில் முன்னணியில் பேடிஎம் நிறுவனம் நிறுவியவர் விஜய் சேகர் சர்மா. இவரிடம் ஆண்டுக்களுக்கு மேல் செயலாளராக பணிபுரிந்த சோனியா தவான் , விஜய் சேகர் சர்மாவின் லேப்டாப்பில் உள்ள நிறுவனம் ச
பேடிஎம் நிறுவனரின் லேப்டாப்பில் உள்ள ரகசிய மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடி வைத்துக் கொண்டு ரூ. 20 கோடி கோரி மிரட்டிய, பெண் உதவியாளர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைனில் பணம் பரிவரித்தனையில் முன்னணியில் உள்ள ஒரு நபரை மிரட்டிய விவகாரம் தற்போது பெரிய பூதாகரமாக மாறியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பணம் பறிக்க திட்டம்:
இணைய பணப் பரிவர்த்தனையில் முன்னணியில் பேடிஎம் நிறுவனம் நிறுவியவர் விஜய் சேகர் சர்மா. இவரிடம் ஆண்டுக்களுக்கு மேல் செயலாளராக பணிபுரிந்த சோனியா தவான் , விஜய் சேகர் சர்மாவின் லேப்டாப்பில் உள்ள நிறுவனம் சார்ந்த ரகசிய தகவல்கள் மற்றும் தனிப்ட்ட தகவல்களை திருடியுள்ளார்.
இந்த தகவலை கொண்டு அவரின் கணவர் ரூபக் ஜெயின், அதே நிறுவனத்தில் வேலை செய்யும் தேவேந்திரகுமார், ரோகித் சோமல் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து சோனியா தவான் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.

20 கோடி கோரி மிரட்டல்:
இந்நிலையில், நிறுவனரின் சகோதரர் அஜய் சேகர் சர்மாவுக்கு செல்போனில் அழைப்பு விடுத்து, தாங்கள் விஜய் சேகர் சர்மாவின் லேப்டாப்பில் உள்ள தகவல்களை திருடியுள்ளதாகவும், 20 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்:
பணம் கொடுக்கவில்லை என்றால் ரகசிய தகவல்களை வெளியிட்டு நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தி போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக நொய்டாவில் உள்ள செக்டார் 20 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

3 பேர் கைது:
புகாரைத் தொடர்ந்து சோனியா தவான், அவரது கணவர் ரூபக் ஜெயின், ஊழியர் தேவேந்திரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரான ரோகித் சோமல் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பதால், அவரை பிடிக்க காவல்துறையின் உதவியை நொய்டா போலீசார் நாடியுள்ளனர்.


Click it and Unblock the Notifications