இனி CIBIL SCORE அவசியம் இல்லை.. லோன் வாங்குபவர்களுக்கு 2 குட் நியூஸ்.. அமைச்சர் விளக்கம்!
சிபில் ஸ்கோர் (CIBIL Score) மற்றும் அதன் அடிப்படையில் லோன் வாங்குவது தொடர்பான முக்கிய விளக்கம் ஒன்று வெளியாகி உள்ளது. முதல் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு, சிபில் ஸ்கோர் இல்லை என்கிற காரணத்திற்காக மட்டுமே கடன் மறுக்கப்படாது என்று நிதி அமைச்சகம் (Ministry of Finance) தெளிவுபடுத்தியுள்ளது.
மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மக்களவையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் ஆன பங்கஜ் சவுத்ரி, புதிய கடன் வாங்குபவர்களிடமிருந்து வரும் கடன் விண்ணப்பங்களை, அவர்களுக்கு முந்தைய கடன் வரலாறு (Credit history) இல்லை என்பதற்காக நிராகரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India ) ஆனது - இதுகுறித்து வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளத்தாகவும் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி (Minister of State for Finance Pankaj Chaudhary) கூறினார்.
கடன் நிறுவனங்களுக்கான சிறந்த நடைமுறைகளின் ஒரு பகுதியாக, முதல் முறையாக கடன் வாங்குபவர்களின் கடன் விண்ணப்பங்கள் (Loan applications) ஆனது கடன் வரலாறு இல்லை என்பதற்காக நிராகரிக்கப்படக்கூடாது என்று ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது என்று சவுத்ரி குறிப்பிட்டார் மேலும் கடன் வாங்குபவர்களுக்கு ஆர்பிஐ அந்த எந்த குறைந்தபட்ச கிரெடிட் ஸ்கோரையும் (Minimum credit score) நிர்ணயிக்கவில்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
மேலும் கடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட சூழலில், கடன் வழங்குபவர்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் பரந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தங்கள் வணிகக் கருத்தாய்வுகளின்படி முடிவுகளை எடுக்கிறார்கள். கடன் தகவல் அறிக்கை (Credit Information Report) என்பது பல காரணிகளால் உருவான உள்ளீடுகளில் ஒன்றாகும் என்றும் சவுத்ரி விளக்கினார்.
சிபில் ஸ்கோர் என்றால் என்ன (What is CIBIL Score)? சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்ணாகும், இது திருப்பிச் செலுத்தும் வரலாறு, செயலில் உள்ள கடன்கள் மற்றும் நிதி ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தனிநபரின் கடன் தகுதியை பிரதிபலிக்கிறது.
இது சிபில் எனப்படும் கடன் தகவல் பணியகம் இந்தியா லிமிடெட் (Credit Information Bureau India Limited) ஆல் வழங்கப்படுகிறது மற்றும் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு வங்கிகளால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு முக்கியமான கருவியாக இருந்தாலும் கூட, குறைந்த சிபில் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோரே இல்லாமல் முதல் முறையாக கடன் வாங்குபவரை தானாகவே தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
சிபில் தேவை இல்லாவிட்டாலும், கடன்களை அனுமதிப்பதற்கு முன்பு முழுமையான ட்யூ டிஜிலேன்ஸை (Due diligence) மேற்கொள்ள நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது காசோலைகளில் திருப்பி செலுத்தும் முறைகளைச் சரிபார்த்தல், தீர்க்கப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட கடன்களை ஆராய்தல் மற்றும் தவறியவை தவணை அல்லது தள்ளுபடி செய்யப்பட்டவற்றை அடையாளம் காண்பது ஆகியவைகளை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் சிஐசி (CIC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் கடன் தகவல் நிறுவனங்கள் (Credit Information Companies) ஆனது தனிநபர்களுக்கு அவர்களின் கடன் அறிக்கையை வழங்குவதற்கு ரூ.100 வரை மட்டுமே வசூலிக்க முடியும் என்பதையும் சவுத்ரி நினைவுபடுத்தினார். கூடுதலாக, 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு சிஐசி-யும் கிரெடிட் ஹிஸ்டரியை கொண்ட தனிநபர்களுக்கு மின்னணு வடிவத்தில் ஆண்டுதோறும் ஒரு இலவச கடன் அறிக்கையை வழங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








