பூமியின் மீது விழப்போகும் சீன ராக்கெட்.. எங்கு விழும்? எப்போது விழும்? யாருக்கெல்லாம் இதனால் ஆபத்து?
சீனாவின் லாங் மார்ச் 5பி ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமி நோக்கி பயணம் செய்துக்கொண்டிருக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில் பூமியின் வளிமண்டலத்தில் இந்த ராக்கெட் நுழைய உள்ளதாகவும், அது எங்குத் தரையிறங்கப் போகிறது என்றே இன்னும் கணிக்க முடியவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. சரியாகச் சொன்னால், இந்த ராக்கெட் பூமியில் எங்கு விழுந்து சேதத்தை ஏற்படுத்தப் போகிறது என்று யாருக்கும் தெரியவில்லை, இதனால் சிறிய பதட்டம் உருவாகியுள்ளது. அமெரிக்கா இப்போது இதை முழு கவனத்துடன் கண்காணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்
சீன லாங் மார்ச் 5பி ராக்கெட்டின் மையமானது நாட்டின் விண்வெளி நிலையத்தின் "மைய தொகுதி" ஐ கடந்த வாரம் குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் கொண்டு சென்றது. ஆனால், அந்த பணி முடிந்ததும், ராக்கெட் பூமியை நோக்கிச் செல்வதைக் காணக்கூடிய ஒரு சுற்றுப்பாதையில் கட்டுப்பாடில்லாமல் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 மீட்டர் உயரமுள்ள இந்த சீன ராக்கெட் எவ்வாறு விழும்? சரியாக எங்குத் தரையிறங்கும்? என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பதே இப்போது அனைவருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது இது பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
விண்வெளி வரலாற்றைச் சற்று புரட்டிப்பார்த்தால் கடந்த 1990 ஆண்டு முதல், 10 டன் எடைக்கு மேல் எடையில் உள்ள எந்தவொரு ராக்கெட்டும் கட்டுப்பாட்டை இழந்து பூமிக்குத் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சீன ராக்கெட் சுமார் 10 டன் எடையுள்ளதாகக் கருதப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்து பூமி நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த சீன ராக்கெட் மே 8 ஆம் தேதி பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எங்குத் தரையிறங்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ராக்கெட்டின் சரியான நுழைவு புள்ளி எது என்று தெரியாமல் பதட்டம்
மேலும், அமெரிக்க விண்வெளி கட்டளை அதன் குப்பைகள் எங்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில் ராக்கெட்டின் பாதையைக் கண்காணித்து வருவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. "அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு அமைப்பு, விண்வெளியில் மார்ச் 5 பி இருப்பிடத்தை அறிந்திருக்கிறது மற்றும் கண்காணிக்கிறது என்று கூறியுள்ளது. ஆனால், பூமியின் வளிமண்டலத்தில் அதன் சரியான நுழைவு புள்ளி எது என்பதை ராக்கெட் நுழைந்த சில மணி நேரங்களுக்கு பிறகு தான் சுட்டிக்காட்ட முடியும் என்று கூறியுள்ளது.

இப்போது இந்த ராக்கெட் எங்கிருக்கிறது? என்ன நிலைமையில் சுற்றித்திரிகிறது?
இது மே 8 ஆம் தேதி அன்று நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," பென்டகனின் அமெரிக்க விண்வெளி கட்டளை ஒரு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. கணிக்கப்பட்ட கணிப்பின் படி, தோராயமாக இந்த ராக்கெட் 100 அடி விண்வெளி இடத்தில் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியைச் சுற்றி வருகிறது. இது நியூயார்க், பெய்ஜிங் மற்றும் நியூசிலாந்தின் தெற்கே மற்றும் வடக்கே நோக்கி கடந்து செல்வதாக ஜிப்ஸ், விண்வெளி கண்காணிப்பு வலைத்தளத்தை மேற்கோள் காட்டி ஃபாக்ஸ் நியூஸ் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் ஆபத்து இருக்கிறதா?
அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இது உலகின் பெருங்கடல்களில் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் விழுந்து தெறிக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது. "மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, காரணம் இது ஏதேனும் சேதம் ஏற்படும் அல்லது இது யாரையாவது தாக்கும் என்பது போன்ற அபாயம் மிகவும் சிறியதாகவே இருக்கிறது. இது இந்தியாவைத் தாக்கும் ஆபத்து நம்பமுடியாத அளவிற்கு சிறியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னால் நடந்த இதே போன்ற சம்பவம்
இருப்பினும், தனிப்பட்ட அச்சுறுத்தல் அடிப்படையில் நான் ஒரு நொடி தூக்கத்தை இழக்க மாட்டேன் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் மையத்தின் வானியற்பியல் விஞ்ஞானி ஜொனாதன் மெக்டோவல் கூறியுள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு, இதே போன்று சீன ராக்கெட்டுகளில் ஒன்றின் பகுதிகள் பூமியில் விழுந்தது. அவற்றில், பெரும்பாலான துண்டுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் தரையிறங்கின. ஆனால், ஐவரி கோஸ்டில் குப்பைகள் துண்டுகள் பதிவாகி இருந்தது, மேலும் இது ஒரு சில நிமிட இடைவெளியில் நியூயார்க்கைத் தவறவிட்டது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications