பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சீன ராக்கெட்.! முக்கியத் தகவலை வெளியிட்ட சீன அதிகாரி.!
சீன விண்வெளி நிலைய கட்டுமான கலத்தை நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலை நிறுத்தி விட்டு, பின்பு மீணடும் பூமிக்கு திரும்புவதற்கான வேலைகளில் லாங் மார்ச் 5பி எனும் ராக்கெட் ஈடுபட்டது. அந்த சமயம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ராக்கெட் இழந்தது.

மேலும் எந்த நேரமும் ராக்கெட் பூமியில் விழும் சூழல் ஏறப்பட்டுள்ளதாக அண்மையில் அமெரிக்கா தெரிவித்தது. பின்பு இந்த ராக்கெட்பூமியின் எந்தப் பகுதியில் விழும் என்பதை கணிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சீனாவின் ராக்கெட், வழியிலேயே எரிந்துவிடும் சாத்தியம்
இருப்பதால் பூமியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் என்பவர், செய்தியாளர்களிடம் கூறியதுஎன்னவென்றால், கட்டுப்பாட்டை இழந்துள்ள அந்த ராக்கெட் ஆனது பூமியின் புவி வட்ட பாதைக்குள் நுழையும்போது, அதனுடையபெரும்பாலான பகுதி தானாகவே எரிந்து விடும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் இந்த ராக்கெட் பூமியில் எந்த பகுதியில் விழும் என்பது குறித்த தகவல் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்றுவாங் வென்பின் அவர்கள் கூறியுள்ளார். குறிப்பாக சர்வதேச கடல்பகுதியில் இந்த ராக்கெட் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வெளிவந்த தகவலின் அடிப்படையில், விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளுக்காக சர்வதேச விண்வெளி நிலையம் புவி வட்டப்
பாதையில் நிலை நிறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதுவும் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகள் இடம்பெற்றுள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா இடம்பெறவில்லை.

எனவே தான் தங்களுக்கு என்றே சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தககது. விண்வெளி வரலாற்றைச் சற்று புரட்டிப்பார்த்தால் கடந்த 1990 ஆண்டு முதல், 10 டன் எடைக்கு மேல் எடையில் உள்ள எந்தவொரு ராக்கெட்டும் கட்டுப்பாட்டை இழந்து பூமிக்குத் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சீன ராக்கெட் சுமார் 10 டன் எடையுள்ளதாகக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications