ட்ரோன் வெற்றியால் உலக நாடுகளுக்கு குறி வைக்கும் சீனா.! இந்தியாவின் நிலை.!
கடல் வாணிபம், மற்ற நாடுகளின் தீவுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாலும், அறிவியல் ரீதியாகவும், வணிக ரீதியாகம் அடிமைப்படுத்த சீனா தயாராகி விட்டது.
உலக அரங்கில் தற்போது சீனா வர்த்த ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. மேலும் சீனாவில் எலக்ட்ரானிட் பொருட்கள் முதல் அணு ஆயுதங்கள், போர் விமானங்கள் என அனைத்தையும் தயாரிக்கும் நாடுகளில் சீனா தற்போது வளர்ந்து நிற்கின்றது.
இந்த நிலையில், அதன் ஆதிகத்தை காலூன்ற பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. வல்லரசு நாடுகளைவிட பிற நாடுகளை தனக்கு கீழே வர்த்த ரீதியாக அடிமைப்படுத்தும் முனைப்புடன் சீனா தலை தூக்க துவங்கியுள்ளது.

கடல் வாணிபம், மற்ற நாடுகளின் தீவுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாலும், அறிவியல் ரீதியாகவும், வணிக ரீதியாகம் அடிமைப்படுத்த சீனா தயாராகி விட்டது.
இந்த திட்டங்களிலும் ஒன்று தான் சீனாவில் ட்ரோன் திட்டம் இது தற்போது வெற்றியடைந்துள்ளது. இதனால் தற்போது குஷியாட்டம் போட்டு வருகின்றது. மேலும், இந்தியா என்ன செய்கின்றது என்று திட்டமும் தற்போது பொது மக்களிடம் வலுத்து வருகின்றது.

ட்ரோன் பயன்பாடு :
1947ம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்டது விமானம் சோவியட் ஏஎன்-2 (oviet An-2). கட்டமைப்பு வசதிகள் தொடங்கி பல தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது இந்த விமானம். மேலும் விவசாயம் அறுவடை செய்வும் இது பன்படுத்தப்பட்டிருகின்றது.

1957ம் ஆண்டு முதல் சீனா:
கடந்த 1957ம் ஆண்டு முதல் சீனா பல்வேறு தரப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தும் விதமாக ட்ரோன்களை தயாரித்து வருகின்றது.

சோதனை வெற்றி:
இதில், இதில் Feihong-98 (FH-98) ட்ரோனனை டவக்கு சீனாவில் உள்ள பாவோடோ என்ற இடத்தில் முதல் முறையாக சீனா சோதனை செய்தது. தற்போது வெற்றி பெற்றுள்ளதால், சீனா படுகுஷியாக இருக்கின்றது.
5250 எடையை ஏற்றிச் செல்லும் ட்ரோன்:
இந்த ட்ரோன் வெற்றிகரமாக 5250 கிலோ எடையை சுமந்து கொண்டு 1200 கிலோ மீட்டர் சென்றுள்ளது. இத்தகைய திறன் உடைய ட்ரோன்களை சீனா பல்வேறு நாடுகளும் வர்த்தக ரீதியாகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மணிக்கு 180 கி.லோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும்.
சீனாவின் சரக்கு விமானம் :
சீனா இதுபோன்று கண்டுபிடித்து மற்ற நாடுகளுடன் சேவை செய்ய வர்த்த ரீதியாகவும் கண்டுபிடிப்பு ரீதியாகவும் தயாராகிவிட்டது. இந்தியா மட்டும் ஏன் இதுபோன்ற கண்டுபிடிப்புகளையும் தொழில் ரீதியாக மற்ற நாடுகளிலும் செய்யவில்லை என்று எண்ணம் தோன்றுகின்றது. இந்தியாவில் ஏராளமான படித்த திறமையுள்ள இளைஞர்கள் இருந்தும், குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் விதமாக இருக்கின்றது.

சீனா ஆதிக்கம் செலுத்தும்:
சீனா இதுபோன்று கண்டுபிடிப்புகளையும் தயாரிப்புகளையும் மேம்படுத்தி தனது ஆதிக்கத்தை சந்தைப்படுத்துவதிலும், மற்ற நாடுகளை வர்த்த ரீதியில் அடிமைபடுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications