சென்னை தொழில் அதிபர் ஆசியாவின் பணக்கார பட்டியலில் முதலிடம்
சென்னையை சேர்ந்த அருன் புதுர், ஆசியாவின் பணக்கார தொழிலதிபர்களின் பட்டியலின் 40 வயது பிரிவில் முதலிடம் பிடித்திருக்கின்றார். இதனை வெல்த் எக்ஸ் எனும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.
செல்ஃபிரேம் எனும் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான அருன் இந்த பட்டியலில் $4 பில்லியன் மதிப்பிலான சொத்துகளுடன் முதலிடம் பிடித்துள்ளதாக குளோபல் வெல்த் இன்டலிஜென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

37 வயதுடைய புதுர் சென்னையை சேர்ந்தவர் என்பதோடு, செல்ஃப்ரேம் நிறுவனத்தை 1998 ஆம் ஆண்டு துவங்கினார். இந்நிறுவனம் மைக்ரோசாப்ட் வேர்டு பிராசஸருக்கு அடுத்த படியாக மென்பொருளை தயாரிக்கின்றது.
இதோடு ரியல் எஸ்டேட், போன்ற துறைகளிலும் புதுர் முதலீடு செய்திருப்பதாக வெல்த் எக்ஸ் நிறுவனம் தெரிவிக்கின்றது. இதே பட்டியலில் சீனாவை சேர்ந்த ஷௌ யஹூய் $2.2 பில்லியனுடன் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதோடு இவருடன் மேலும் ஐந்து சீன தொழிலதிபர்களும், ஜப்பான் நாட்டில் இருந்து மூன்று தொழிலதிபர்களும் பட்டியலை நிரப்பியுள்ளதாக வெல்த் எக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications