600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி?
சென்னையை சேர்ந்த சாப்ட்வோர் இன்ஜினியர், தனியார் வேலை வாய்ப்பகம் நடத்தி, ஒரு பிரபலமான கம்பெனியில் வரவேற்பாளராக பணிபுரிய பெண்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளார்.

மேலும், அதில் தனது செல்போன் எண்களையும் கொடுத்துள்ளார். இதை நம்பி 600 பெண்கள் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, அவரின் வசிய பேச்சால் மயங்கிய பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களையும் பெற்றுள்ளார்.
பிறகு வீடியோ காலில் அவர்கள் பேசியும் ஆபாச வீடியோக்களையும், பதிவு செய்துள்ளார். பிறகு, இதை ஆன்லைனில் வெளியிடுவதாக கூறி அவர்களிடம் பணத்தையும் பறித்துள்ளார். இந்த வழக்கில் அவர் தற்போது, கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் தற்போது, நம்மை மகிவும் மனதை நெறுங்க வைத்துள்ளது.

வரவேற்பார் விளம்பரம்:
சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் க்ளெமெண்ட் ராஜ் செழியன் என்ற பிரதீப் (33). திருமணமான இவரின் மனைவியும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மனைவிக்கு பகலில் வேலை. மேலும் செழியன் பகலில் போலியாக வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி வந்தார்.

போலி நேர்காணல்:
இந்நிலையில், ஆன்லைனில் போலியாக பிரபல நிறுவனத்திற்கு, வரவேற்பாளராக பணியாற்ற பெண்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். இதை பாத்து ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இதற்கு மேலும், அந்த பெண்களின் செல்போன் எங்களையும் பெற்றுள்ளார் செழியன். பிறகு அவர்களிடம் நேர்காணலும் நடத்தி

நிர்வாண புகைப்படங்கள்:
அவர்களிடம் கண்டிப்பாக உங்களுக்கு அந்த நிறுவனத்தில் வேலை பெற்றுத்தறுகின்றேன் என்று கூறி பெண்களிடம் ஆபாச புகைப்படங்களையும் பெற்றுள்ளார். மேலும், இதை ஆபாச இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாகவும், மிரட்டி அவர்களிடம் வீடியோ காலில் பெண்களின் நிர்வாண காட்சிகளையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

16 மாநிலங்களை சேர்ந்த 600 பெண்கள்:
இதில், 16 மாநிலங்களை சேர்ந்த 600 பெண்களிடம் அவர் நைசாக பேசி அவர்களிடம் ஆபாச வீடியோக்களையும் பெற்றுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. அவர்களை மிரட்டி ஏமாற்றி பணத்தையும் பெற்றுள்ளார்.
அந்த பெண்களிடம் உங்களிடம் ஹெச் ஆர் பேசுவார் என்று உறுதியளித்துள்ளதால், அதை நம்பியே பெண்கள் ஏமாந்ததும் தெரியவந்தது.

புகார் கொடுத்த பெண்:
ஹைதராபாத்தை சேர்ந்த 29 வயதான பெண் கடந்த ஏப்ரல் மாதம் அளித்த புகாரால், இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. 5 மாத தீவிர தேடுதலுக்கு பிறகு, சென்னையில் போலீசார் பிரதீப்பை கைது செய்துள்ளனர்.

60 பெண்கள் ஆந்திரவை சேர்ந்தவர்கள்:
இதில் சுமார் 60 பெண்கள் ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஒரு சில பெண்கள் மட்டும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் இதுபோன்று நடத்தினால், சிக்கிக் கொள்வோம் என்று நினைத்து பெரும்பாலும், வெளிமாநில பெண்களையே குறி வைத்துள்ளார்.

2 செல்போன்கள் பறிமுதல்:
இந்த தொழில் ஓராண்டாக இந்த தொழில் நடத்தி வந்துள்ளார்.
மேலும், செழியனிடம் இருந்து இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளார். இதுகுறித்து தடவியல் பரிசோதனைக்கும் நடத்த போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications