சென்னையில் பரிதாபம், செல்பீ மோகத்தில் உயரிழந்த பள்ளி மாணவர்.!!
செல்பீ மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் ரயில் தண்டவாளத்தில் செல்பீ எடுக்க முயன்ற சென்னை மாணவர் உயிர் இழந்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விடுமுறை தினத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் செலவழிக்க நண்பர்களுடன் சென்றிருந்தார் பூந்தமல்லியை சேர்ந்த தினேஷ் குமார். மாலையில் வீடு திரும்பும் போது வண்டலூர் ரயில் நிலைய தண்டவாளம் அருகே நடந்து வரும் போது தினேஷ்குமார் செல்பீ எடுக்க முயன்றிருக்கின்றனர்.
அந்நேரம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் செல்பீ எடுக்க முயன்ற தினேஷ்குமார் மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே தினேஷ்குமமார் உயிரிழந்தார்.

சாதிக்க நிறைய வழிகள் இருக்கும் நிலையில் இன்றைய இளைஞர்கள் செல்பீ எடுக்கும் போது கவனமாக இருப்பதை தாண்டி ஆபத்தான இடங்களில் செல்பீ எடுப்பதை தவிர்த்தால் இது போன்ற சோக நிகழ்வுகளை தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications