Home
News

லோன் அப்ளிகேஷன்கள் மூலம் இப்படியெல்லாம் கொடுமை நடக்குதா? உஷாரய்யா உஷாரு.!

தற்போது பல ஆப்ஸ் வசதிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதாவது நமது தினசரி வேலைகளை சில ஆப்ஸ்கள் மிகவும் எளிமையாக்குகிறது என்றுதான் கூறவேண்டும். ஆனாலும் ஒரு சில ஆப்ஸ்களை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.

சென்னை காவல் ஆணையர்

சென்னை காவல் ஆணையர்

அதாவது சென்னை காவல் ஆணையர் ஆன்லைன் மூலம் கடம் பெறும் அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களைஎச்சரித்துள்ளார். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 குறைவான சிபில் ஸ்கோஸ்கோர்

குறைவான சிபில் ஸ்கோஸ்கோர்

தற்போது நாட்டில் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் அப்ளிகேஷன்கள் அதிகரித்துவிட்டன என்றுதான் கூறவேண்டும். அதுவும் குறைவான சிபில் ஸ்கோஸ்கோர் இருந்தாலே போதும் என்று கூறி சில மோசடி கும்பல் தங்கள் வேலைகளை காட்டத்துவங்கிவிடுவர்.

புகைப்படங்கள்?

புகைப்படங்கள்?

குறிப்பாக சில லோன் அப்ளிகேஷன்களில், வாங்கிய பணத்தை விட அதிகமான பணத்தை கட்டும்படி நச்சரிக்கும் இந்த கும்பல், ஒரு கட்டத்தில் கடன் வாங்கியவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவோம் என்றும் மிரட்டவும் செய்வதாக காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

 உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா பகுதிகளில் ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலம் மோசடி செய்து வந்த 4 நபர்களை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

4 பேர் கைது

4 பேர் கைது

அதேபோல் இந்த 4 நபர்கள் கடன் பெற்றுத் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதும் விசாரணையில்
தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து பேசிய சென்னை காவல்துறை ஆணையர் ஷங்கர் ஜிவால், ஆன்லைன் லோன் அப்ளிகேஷன்கள் மூலம் கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை ஆபசமாக சித்தரித்து மிரட்டிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

பயன்படுத்த வேண்டாம்

பயன்படுத்த வேண்டாம்

அதன்பின்பு லோன் பெறும் அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். குறிப்பாக இதுவரை உத்திர பிரதேசத்தை சேர்ந்த தீபக்குமார் பாண்டே (26), ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்தர் தன்வர் (24) இவரது சகோதரி நிஷா (22),
டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் சர்மா (21) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து இதுபோன்ற வேலைகளை செய்ததும் தெரியவந்துள்ளதாக ஷங்கள் ஜிவால் கூறியுள்ளார்.

இன்னும் 50 பேர்?

இன்னும் 50 பேர்?

அதேபோல் இந்த மோசடி வலையில் இன்னும் 50 பேர்கொண்ட கும்பல் ஈடுபட்டிருப்தாகவும், மீதியுள்ள நபர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்வர்களின் செல்போன்கள்

மேலும் கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கி கணக்குகளை முடக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவித்த காவல்துறையினர், லோன் அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Chennai Police Commissioner shankar jiwal has warned not to use loan applications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X