Home
News

சந்திரயான் 2 தரையிறக்கத்தில் பின்னடைவு: 1 மணி முதல் இறுதி நிமிடம் வரை நடந்தது என்ன தெரியுமா?

பூமியை 22 நாட்கள் சுற்றிய சந்திரயான் 2 விண்கலம் நிலவை அடைய மொத்தம் 48 நாட்கள் எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் இன்று சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப்பகுதியில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இதில் சிக்கல் ஏற்பட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விக்ரம் லேண்டர் நிலை என்ன?

விக்ரம் லேண்டர் நிலை என்ன?

நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டு இருந்த சந்திரயான் 2 விண்கலத்தின், விக்ரம் லேண்டருடன் இறுதி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இறுதி நேரத்தில் நடந்த உண்மை

இறுதி நேரத்தில் நடந்த உண்மை

விக்ரம் லேண்டர் தரை இறங்குவதற்குத் தயார் செய்யப்பட்ட நேரத்திலிருந்து அதன் தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரம் வரை என்ன நடந்தது என்ற உண்மையைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். நிமிடத்துக்கு நிமிடம் விக்ரம் லேண்டர் உடன் நடந்த தொடர்பு விபரங்கள் இதோ.

1:14 மணிக்கு நடந்தது என்ன?

1:14 மணிக்கு நடந்தது என்ன?

சந்திரனின் தென் துருவத்தில் சாஃப்ட் லேண்டிங் செய்வதற்கான தளங்கள் ஏற்கனவே லேண்டர் விக்ரமின் உள் கணினிக்கு அனுப்பப்பட்டது. அசல் தரையிறங்கும் தளத்தை அடைய லேண்டர் தவறினால், இஸ்ரோ கணித்துள்ள மாற்று தரையிறங்கும் தளத்தில் லேண்டர் தரையிறக்கத் தயார் செய்யப்பட்டது.

1:18 மணிக்கு நடந்தது என்ன?

1:18 மணிக்கு நடந்தது என்ன?

விக்ரம் லேண்டரின் இயங்கும் தரையிறக்கம், சந்திரனின் மேற்பரப்பில் இறங்குவதற்கு 20 நிமிடங்களில் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. இறங்கு செயல்முறை தொடங்கியதும், சந்திரனின் மேற்பரப்பைத் தொடுவதற்கு லேண்டர் சுமார் 15 நிமிடங்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1:21 மணிக்கு நடந்தது என்ன?

1:21 மணிக்கு நடந்தது என்ன?

விக்ரம் லேண்டரின் இறுதிக்கட்ட தரையிறக்கும் நிகழ்வதை விஞ்ஞானிகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திலிருந்து வீடியோ மூலம் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

1:25 மணிக்கு நடந்தது என்ன?

1:25 மணிக்கு நடந்தது என்ன?

பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் மிஷன் கட்டுப்பாட்டு மையத்திற்கு, விக்ரம் லேண்டரின் தரையிறக்கம் காணப் பிரதமர் நரேந்திர மோடி வந்து சேர்ந்தார்.

1:34 மணிக்கு நடந்தது என்ன?

1:34 மணிக்கு நடந்தது என்ன?

லேண்டர் விக்ரம் அதன் இறுதிக்கட்ட இயங்கும் இறக்கத்திற்குத் தயார் செய்யப்பட்ட 5 நிமிடத்திற்கு முன் நடந்தது. சந்திரனின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரை இறங்க மொத்தம் நான்கு கட்டங்களாக நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

1:38 மணிக்கு நடந்தது என்ன?

1:38 மணிக்கு நடந்தது என்ன?

லேண்டர் விக்ரம் அதன் இறுதி இயங்கும் இறக்கத்தை தொடங்கப்பட்டது. சரியாக இந்த நிமிடத்தில் தான் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு முதல் கட்ட தரையிறக்கம் தொடங்கப்பட்டது.

1:49 மணிக்கு நடந்தது என்ன?

1:49 மணிக்கு நடந்தது என்ன?

கரடுமுரடான(Rough) பிரேக்கிங் ஃபேஸ் முடிக்கப்பட்டு, விக்ரம் லேண்டர் சிறந்த பிரேக்கிங் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

1:56 மணிக்கு நடந்தது என்ன?

1:56 மணிக்கு நடந்தது என்ன?

மிஷன் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து லேண்டர் விக்ரமின் இறக்கத்தை பற்றிய கூடுதல் புதுப்பிப்புகளை விஞ்ஞானிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

2:05 மணிக்கு நடந்தது என்ன?

2:05 மணிக்கு நடந்தது என்ன?

தரை இறக்கத்தின் இறுதிக் கட்டத்தில், விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பைத் தொடுதலில் தாமதம் ஏற்பட்டது. இஸ்ரோ மையம் முழுவதும் தற்போது சந்திரனில் தரையிறங்கிய லேண்டரிடமிருந்து சிக்னலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

2:09 மணிக்கு நடந்தது என்ன?

2:09 மணிக்கு நடந்தது என்ன?

லேண்டர் விக்ரமிடமிருந்து எந்த சிக்னல் மற்றும் தொடர்பும் இல்லாததால், சந்திரயான் 2 இன் மிஷன் பற்றி அனைவருக்கும் கவலை எழத்துவங்கியது.

2:11 மணிக்கு நடந்தது என்ன?

2:11 மணிக்கு நடந்தது என்ன?

லேண்டர் விக்ரமுடன் இணைப்பு மீண்டும் நிறுவப்பட்டது. விக்ரம் லேண்டர் இன் டேட்டா தகவல்கள் செயலாக்கப்பட்டு, என்ன நடந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

2:17 மணிக்கு நடந்தது என்ன?

2:17 மணிக்கு நடந்தது என்ன?

"விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி தரையிறக்கப்பட்டது, லேண்டரின் செயல்திறன் நிலவின் மேற்பரப்பிலிருந்து சுமார் 2.1 கி.மீ உயரம் வரை நிலையாக இருந்தது. பின்னர், லேண்டருடன், தரை நிலையங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டரின் தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டுவருகிறது" என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

2:30 மணிக்கு நடந்தது என்ன?

2:30 மணிக்கு நடந்தது என்ன?

"வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளால் நிறைந்துள்ளது. இது சிறிய சாதனை அல்ல. ஒட்டுமொத்த தேசமும் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறது. நல்லதையே நம்புவோம்" என்று பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளிடம் கூறினார்.

2:41 மணிக்கு நடந்தது என்ன?

2:41 மணிக்கு நடந்தது என்ன?

இந்தியா அதன் விஞ்ஞானிகளை நினைத்து பெருமிதம் கொள்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

2:42 மணிக்கு நடந்தது என்ன?

2:42 மணிக்கு நடந்தது என்ன?

சந்திரனின் சுற்றுப்பாதையில் இருக்கும் ஆர்பிட்டர் இன்னும் செயல்பட்டு வருகிறது. சந்திரயான் 2 இன் ஆர்பிட்டரில் தான் அதிக எண்ணிக்கையிலான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக எட்டு அறிவியல் பேலோடுகளைக் இந்த ஆர்பிட்டர் கொண்டுள்ளது, மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

2:48 மணிக்கு நடந்தது என்ன?

"தகவல்தொடர்பு இழக்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனும் # சந்திரயான் 2 இன் இதயத் துடிப்பை உணர முடியும். 'முதலில் நீங்கள் வெற்றிபெறவில்லை என்றால், சோர்வடையாமல் மீண்டும் முயற்சி செய்யுங்கள்,'' என்று மஹிந்திரா குரூப்ஸ் இன் குழுத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, விக்ரமுடன் இஸ்ரோ தொடர்பு இழந்ததை அடுத்து ஊக்கமளிக்கும் டிவிட்டர் பதிவைப் பதிவிட்டுள்ளார்.

4:05 மணிக்கு நடந்தது என்ன?

4:05 மணிக்கு நடந்தது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 8:00 மணிக்கு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உரையாற்றவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo Source : DD NEWS

Best Mobiles in India

English summary
Chandrayaan 2 landing failed Do you know what happened from 1am to the last minute : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X