Just In
- 42 min ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 2 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 2 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 4 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- Sports இவருக்கா இந்திய அணியில் இடமில்லை.. பொங்கி எழுந்த ரிஷப் பண்ட்.. அரண்டு போன குஜராத்
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மத்திய அரசு ஓகே சொல்லியாச்சு: சந்திரயான் 3 குறித்து இஸ்ரோ சிவன் சுவாரஸ்ய தகவல்
2020 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு புதிய பயணங்களை திட்டமிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 10-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சிவன் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஜிசாட் -1 செயற்கைகோள்
இந்த பட்டியலில் மேம்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களான ஜிசாட் -1 மற்றும் கிசாட் -2 ஆகியவை அடங்கும். கூடுதலாக, பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் ரிசாட் 2 பிஆர் 2 மற்றும் கண்காணிப்புக்கான மைக்ரோசாட் ஆகியவையும்
ஆதித்யா 1(சன் மிஷன்)
2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆதித்யா எல் 1 (சன்) மிஷனையும், டிசம்பரில் ககன்யானின் முதல் ஆளில்லா சோதனை விமானத்தையும் தொடங்க இலக்கு வைத்துள்ளோம் என்று தலைவர் சிவன் கூறியுள்ளார். ஆதித்யா மிஷன் சூரியனை ஆராய்வதற்கான இந்தியாவின் முதல் பணி ஆகும். இதை விண்ணுக்கு எடுத்து செல்ல 400 கிலோ பி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனை ஆராயத் திட்டம்
இந்த செயற்கைக்கோள் ஆறு விஞ்ஞான ஆராய்ச்சி பேலோடுகளை சுமந்து செல்ல உள்ளது. அவை பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ தூரத்தில் உள்ள லக்ராஜியன் புள்ளி 1 (எல் 1) ஐ சுற்றி உள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் இந்த நிகழ்வின் போது எந்தவொரு கிரகணமும் இல்லாமல் சூரியனை துள்ளியமாக ஆராய முடியும் என கண்காணிக்கப்படுகிறது. இது இஸ்ரோவுக்கு ஒரு பெரிய வெற்றியை அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டமும் அடுத்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. மூன்று விண்வெளி வீரர்கள் பல்வேறு விண்பயிற்சி சோதனைகளுக்காக ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பப்படு உள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆர்.எல்.வி என்ற சிறிய செயற்கைக்கோள் செலுத்தும் கருவியும் 2020 ஆம் ஆண்டில் ஏவப்பட உள்ளது. செலவினங்களைக் குறைப்பதிலும், இஸ்ரோ ஊழியர்களுக்கு அதிக ஊதியம் செலுத்துவதிலும் ஆர்.எல்.வி ராக்கெட்டுகள் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
இது என்ன புது சோதனை: இனி இந்த போன்களில் வாட்ஸ் ஆப் செயல்படாது!
பட்ஜெட் சுமார் ரூ.666 கோடி
அடுத்த ஆண்டு இஸ்ரோவிற்கு அரசு வழங்கவுள்ள பட்ஜெட் சுமார் ரூ.666 கோடியாகும். சந்திரயான் 3 அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சந்திரயான் 3 திட்டத்தில் லேண்டர், ரோவர் மற்றும் கூடுதல் எரிபொருள் ஏற்றிச் செல்ல ஒரு பாகமும் இருக்கும். இதற்கான 75 கோடியில் ரூ.60 கோடி, சந்திரயான் 3-க்குத் தேவையான கருவிகள், பாகங்கள் வாங்குவதற்கும் ரூ.15 கோடி மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
செலவுத் திட்டங்கள்.,
ரூ.8.6 கோடி மனிதனை விண்ணிற்கு அனுப்பும் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் எனவும் ரூ.12 கோடி செலவில் சிறிய செயற்கைகோள்கள் சிலவற்றை விண்ணிற்கு எடுத்துச் செல்லப்படும் வாகனத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது(இந்த நிகழ்வு 2021-2022ல்தான் செயல்படுத்தப்படும்). அதேபோல் இந்த விண்கலன்களை ஏவத்தேவையான ஏவுதளத்தை உருவாக்க ரூ.120 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரோ சிவன் பெங்களூருவில் பேட்டி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிவிட்டது.
விரைவில் வரும் ககன்யான் திட்டம்
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதற்காக 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். அதற்காக 6 ஆய்வு மையம் உருவாக்கப்படும்.
மகாபிரபு இங்கயும் வந்துட்டீங்களா., அமேசான், பிளிப்கார்டு போட்டியாக ஜியோமார்ட் அறிமுகம்.!
சந்திரயான்-3 மத்திய அரசு ஒப்புதல்
சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. விரைவில் இந்த திட்டத்தின் செயல்பாடு தொடங்கும். இது லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும். சந்திரயான்-2 திட்டத்தில் லேண்டர் வேகமாக சென்று நிலவில் மோதியதால் வெற்றிகரமாக தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் ‘ஆர்பிட்டர்' செயல்பட்டு வருகிறது. அது இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470