Google குரோம் யூஸ் பண்றீங்களா? மக்களை எச்சரித்த மத்திய அரசு.. இது தெரியாமல் ஆபத்தில் சிக்காதீர்கள்? என்னாச்சு?
மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலை பதில் அணி (CERT-In), கூகிள் குரோம் பயனர்களுக்கு ஒரு முக்கியமான பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்டு, புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப் பிரௌசர் சேவையான கூகுள் குரோம் (Google Chrome Web Browser) சேவையை பயன்படுத்தும் அணைத்து மக்களுக்கும் இந்த அவசர எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை செய்தியை கவனிக்காமல் கூகுள் குரோம் பயன்படுத்தினால், கூகுள் குரோம் பயனர்கள் சில டிஜிட்டல் ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. விரிவான முழு தகவல் இதோ.
இந்த எச்சரிக்கை, பரவலாக பயன்படுத்தப்படும் கூகுள் குரோம் வெப் பிரௌசரில் உள்ள ஒரு தீவிரமான பாதிப்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இது சைபர் குற்றவாளிகளால் கூகுள் குரோம் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்குள் ஊடுருவப்பட்டு, அந்த சாதனத்தில் உள்ள தனிப்பட்ட தகவல்களை திருடி, அதை வைத்து பணம் கேட்டு மிரட்டும் அல்லது இணையத்தில் தனிப்பட்ட விபரங்களை விற்பனை செய்யப்படும் ஆபத்தான மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Google குரோம் யூஸ் பண்றீங்களா? மக்களை எச்சரித்த மத்திய அரசு:
இந்த மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் புதிய சிக்கல் CERT-In மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசமான ஆபத்து, ஸ்மார்ட்போன் (Smartphone), லேப்டாப் (Laptop) மற்றும் கணினி (Computers) உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் கூகுள் குரோம் பயன்படுத்தும் போது பரவலாக சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் இந்த குறைபாட்டைப் பயன்படுத்தி கூகுள் குரோம் அணுகும் தகவல் மட்டுமின்றி, சாதனங்களில் இருக்கும் பல்வேறு ஆப்ஸ்களில் இருக்கும் தகவல்களையும் திருட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தெரியாமல் ஆபத்தில் சிக்காதீர்கள்? Google Chrome-க்கு என்னாச்சு?
CERT-In, கூகிள் குரோம் பரவலாக பயன்படுத்தப்படுவதால், விண்டோஸ், மாக்சோஸ் மற்றும் லினக்ஸ் தளங்களில் உள்ள பயனர்களுக்கு இந்த பாதிப்பு குறிப்பாக கவலைக்குரியது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் பொருள் உலகளவில், ஆண்ட்ராய்டு, iOS மற்றும் தனிப்பட்ட கணினிகள் போன்ற அனைத்து வகையான சாதனங்களிலும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பயனர்கள் சாத்தியமான ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள்.
இதில் இருந்து தப்பிக்க ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆண்ட்ராய்டு அல்லது iOS சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், உடனே கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) சென்று, கூகிள் குரோமை அப்டேட் செய்ய அறிவுரைக்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட பிறகு, கூகுள் குரோம் ஆப்ஸை மீண்டும் ஒரு முறை கிளோஸ் செய்து ஓபன் செய்து பயன்படுத்த அறிவுரைக்கப்பட்டுள்ளது.
பிசி (PC), டெஸ்க்டாப் (Desktop) மற்றும் லேப்டாப் (Laptop) பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?
இதேபோல், பிசி பயனர்கள் கூகிள் குரோமைத் தொடங்கி, மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து "Settings" என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, "About Chrome" என்பதற்குச் சென்று அப்டேட்களைச் சரிபார்த்து, கிடைக்கக்கூடிய புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்து, பிறகு கூகுள் குரோமை க்ளோஸ் செய்து, மீண்டும் திறக்கவும். புதிய Google Chrome Update மூலம் இந்த ஆபத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
உங்களை சுற்றியுள்ளவர்கள், மற்றும் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உறவினர்கள் யாரும் கூகுள் குரோம் வெப் பிரௌசர் பயன்படுத்தினாலும், உடனே இந்த அப்டேட் குறித்த தகவலை தெரியப்படுத்தி, அவர்களையும் ஆபத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவுங்கள் மக்களே. இந்த தகவலை முடிந்த வரை மற்றவர்களுடன் பகிரும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








