டெலினார் கம்யூனிகேஷன்ஸ் & பார்தி ஏர்டெல் லிமிடெட் உடன் இணைக்கப்பட்டுள்ளதை சிசிஐ ஒப்புக்கொண்டுள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனம், டெலினார் கம்யூனிகேஷன்ஸ் புதிய திட்டங்கள் என்ன?
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான பார்தி ஏர்டெல் நிறுவனம், டெலினார் (இந்தியா) கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஒப்புதல் அளித்துள்ளது இதன் மூலம் பல சேவைகள் மற்றும் சலுகைகள் போன்றவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலினார் (இந்தியா) கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பார்தி ஏர்டெல் லிமிடெட் உடன் இணைக்கப்பட்டுள்ளதை சிசிஐ ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் ஏர்டெல் மற்றும் டெலினோர் (இந்தியா) ஆகியவற்றிற்கும் இடையேயான இணைப்புத் திட்டத்திற்கான இந்திய பங்குச் சந்தை மற்றும் பி.எஸ்.இ. லிமிடெட் (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்கு பரிவர்த்தனை இந்திய லிமிடெட் (என்எஸ்இ) ஆகியவற்றின் அங்கீகாரத்தை ஏர்டெல் சமீபத்தில் பெற்றுள்ளது. அதன்பின் ஏர்டெல் தெரிவித்தது என்னவென்னறால் இவை அனைத்தும் சட்டப்பூர்வ ஒப்புதல்களுக்கு உட்பட்டதாகும்.
டெலிநெர் சவுத் ஆசியா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ரெட் லிமிடெட் (டெலினார் ) உடன் ஒரு உறுதியான உடன்படிக்கையில் நுழைந்துள்ளதாக ஏர்டெல் அறிவித்தது. (பிப்ரவரி 23இ 2017). ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா, குஜராத், யூ.பீ (கிழக்கு), உ.பி. (மேற்கு) மற்றும் அசாம் ஆகியவை ஏழு வட்டங்களில் ஏர்டெல் நிறுவனம் ஏழு வட்டாரங்களில் இவற்றின் திட்டங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் நெட்வொர்க் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை மேம்படுத்துவது இந்தத் திட்டமாகும். இந்த ஏழு வட்டங்களில் ஏர்டெல் அதன் வலுவான ஸ்பெக்ட்ரம் தரம் அதிகரிக்க உதவுகிறது. 1800 மெகா ஹெர்ட்ஸ் குழுவில் 43.4 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் கூடுதலாக பயன்பெரும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications