அடேங்கப்பா., சிரித்தால் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதி: ஊழியர்களை உற்சாகப்படுத்தும் நிறுவனம்.!

|

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்த நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்து வருவது ஆறுதல் தருகிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் இரண்டாம் அலையை போலவே மூன்றாம் அலையும் அதிக ஆபத்து கொண்டதாக இருக்குமோ என்று அஞ்சப்படுகிது. அதாவது புதிய உருமாறிய கொரோனா பரவுவதால் கேஸ்களும் அதிகம் வரலாம் என்று அஞ்சப்படுகிறது.

வைரஸ் நோய் தொற்று பரவலை

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை குறைக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதிப்பு அளவை பொறுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்

குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்கள். அதாவது ஊழியர்கள் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் மூலம் தங்களது வேலைகளை கவனிக்கிறார்கள்.

யாருய்யா இவரு: ஆபாச பேச்சு, பிட்காயின் முதலீடு, வெளிநாட்டு பழக்கம்- யூடியூப் மதன் அதிரடி கைது!யாருய்யா இவரு: ஆபாச பேச்சு, பிட்காயின் முதலீடு, வெளிநாட்டு பழக்கம்- யூடியூப் மதன் அதிரடி கைது!

ஒரு சில நிறுவனங்கள் சிறப்பான நன்மைகள்

அதேபோல் வெளிநாடுகளில் அலுவலகம் வந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு சில நிறுவனங்கள் சிறப்பான நன்மைகள்மற்றும் சலுகைகளை வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும்.

கடலுக்கு அடியில் இப்படியொரு தீவு இருக்குமா? கூகுள் மேப்ஸ் காட்டிய புகைப்படம்.! எங்கு தெரியுமா?கடலுக்கு அடியில் இப்படியொரு தீவு இருக்குமா? கூகுள் மேப்ஸ் காட்டிய புகைப்படம்.! எங்கு தெரியுமா?

மிகவும் பிரபலமான கேனான் நிறுவனம்

இந்நிலையில் மிகவும் பிரபலமான கேனான் நிறுவனம் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம்செய்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற தொழில்நுட்பங்கள் பல்வேறு இடங்களில் வந்தால் நன்றாக தான் இருக்கும்.

நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி உடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்டிவிகள்.. லிஸ்டில் லேப்டாப் கூட இருக்கு..நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி உடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்டிவிகள்.. லிஸ்டில் லேப்டாப் கூட இருக்கு..

கேன் செய்யும் ஒரு புதிய

அதாவது சிரிப்பை ஸ்கேன் செய்யும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை தன்னுடைய ஊழியர்களின் நலன் கருதி கேனான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிவந்த தகவலின்படி பெய்ஜிங்கில் உள்ள கேனான் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் சிரிப்பை ஸ்கேன் செய்யும் கேமரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 ஊழியர்கள் அந்த அலுவலகத்துக்குள்

குறிப்பாக ஊழியர்கள் அந்த அலுவலகத்துக்குள் நுழையும் போது தங்களது சிரித்த முகத்தை காண்பித்தால் மட்டுமே அது நுழையஅனுமதிக்கும். அதாவது பணியாளர்கள் பணி நேரத்தில் 100 சதவீதம் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய தொழில்நுட்ப சாதனத்தை அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 22.. முக்கியமான விஷயமே இது தான்..அடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 22.. முக்கியமான விஷயமே இது தான்..

 செய்யும் ஊழியர்களுக்கு

இதுபோன்ற தொழில்நுட்ப சாதனங்கள் வரவேற்கத் தக்கது தான். ஆனாலும் அந்த நிறுனவத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பல சலுகைகளை வழங்கினால் இதை விட மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

photo courtesy: Canon Information Technologies

News Source: theverge

Best Mobiles in India

English summary
Canon's new technology that allows employees to enter the office only if they smile: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X