ஜியோ & நோக்கியா பீச்சர்போன் விற்பனை ஒரு பெரிய பூஸ்ட் கொடுக்க முடியுமா?
நோக்கியா 130 பொதுவாக 32ஜிபி வரை மெமரி கார்டு ஆதரவு கொண்டுள்ளது, அதன்பின் 44மணி நேரம் பயன்படும் வகையில் இதனுள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது அதிக்கப்படியான மக்கள் ஸ்மார்ட்போன் போன்ற பல சாதனங்களை பயன்படுத்துகின்றனர். கடந்த பத்து வருடங்களுக்கு முன் சாதரன சிறிய மொபைல்போன் பயன்பாடுகள் தான் அதிகம் இருந்தது, தற்போது அதை நினைவுபடுத்தும் வகையில் ஜியோ மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் சிறிய பீச்சர்போன் வகைகளை தயாரித்து வெளியிடுகின்றன.
இந்த பீச்சர்போன் பொறுத்தவரை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் மேலும் குறிப்பிட்ட செயல்திறன்களுடன் இந்த பீச்சர்போன் வெளிவருகிறது, மொபைல் சந்தையில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது பீச்சர்போன் மாடல்கள்.

நோக்கியா 105:
நோக்கிய 105 மற்றும் நோக்கிய 130 என்ற பீச்சர் போன்கள் 1.8-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் பல்வேறுசிறப்பம்சங்கள் இந்த மொபைல்போனில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஜூலை 19ஆம் இந்த மொபைல்போன் விற்ப்பனைக்கு வந்தது. நோக்கியா 105 பொறுத்தவரை இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ளது. நீலம், வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களில் இந்த மொபைல்போன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 130:
நோக்கியா 130 பொதுவாக 32ஜிபி வரை மெமரி கார்டு ஆதரவு கொண்டுள்ளது, அதன்பின் 44மணி நேரம் பயன்படும் வகையில் இதனுள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த மொபைல்போன் வரும் எனத் தெரிவிக்கபபட்டுள்ளது.

ஜியோ பீச்சர்போன்:
கடந்த வாரம் வெளியான தகவல்களில் புதிய ஜியோ பீச்சர்போன் விலை ரூ.500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்படும்என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே வெளியான தகவல்களில் ரிலையன்ஸ் லைஃப் பிரான்டு பீச்சர் போனாக இது வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

லைஃப் பிரான்டிங்:
புதிய ஜியோ பீச்சர்போன்கள் லைஃப் பிரான்டிங் கொண்டு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. இரண்டு வித மாடல்களில் வெளியிடப்பட இருக்கும் புதிய பீச்சர்போன்களில் இரண்டாவது மாடல் ரூ.2,639 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் மற்றொரு மாடல் ரூ.1,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications