ரூ.100 என்சிஎப் 150 சேனல்கள் கேபிள் பயனர்கள் ஹேப்பி.!
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டி.டி.எச் மற்றும் கேபிள் நெட்வொர்க்குகளுக்கு ஒரு புதிய கட்டண முறையை அமுல்படுத்தியது. இதன் காரணமாக, டி.டி.எச் மற்றும் கேபிள் டிவி சந்தாதாரர்களின் மாத சந்தா செலவில் அதிகரிப்பு ஏற்பட்டது.

டிராய் நடவடிக்கை
ஒரு பயனர் செலுத்த வேண்டிய மாதாந்திர சந்தா செலவுகளை குறைக்க புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. குறைபாடுகளை களையவும் பல்வேறு நடைமுறைகளையும் டிராய் அமல்படுத்தி வருகின்றது.

எய்ட்சிஎஃப்
அகில இந்திய டிஜிட்டல் கேபிள் கூட்டமைப்பு (எய்ட்சிஎஃப்) இப்போது ஒரு சிறிய விலை மாற்றத்தை செயல்படுத்தியுள்ளது. இது சந்தா செலவுகளை குறைக்க உதவுகிறது. 100 சேனல்களுக்கு பதிலாக ரூ.130 என்சிஎஃப் கட்டணத்தில் பயனர்களுக்கு 150 ஸ்டாண்டர்ட் டெபனிஷன் (எஸ்டி) சேனல்களை இப்போது வழங்குவதாக எய்ட்சிஎஃப் முடிவு செய்துள்ளது.

நடைமுறை மாற்றம்:
முன்னதாக 100 சேனல்களைப் பெற விரும்பும் சந்தாதாரர்களுக்கு 25 சேனல்களுக்கு கூடுதலாக ரூ .20 செலுத்த வேண்டியிருந்தது. அதாவது அவர்கள் 150 சேனல்களைப் பெற விரும்பினால் அவர்கள் ரூ .170 + ஜிஎஸ்டியை என்சிஎஃப் கட்டணமாக செலுத்த வேண்டும். தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

கேபிள் டிவி சந்தார்களுக்கு மட்டும்
இந்த மாற்றம் தற்போது கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் டி.டி.எச் சந்தாதாரர்களுக்கு தற்போது வரவில்லை. டி.டி.எச் சந்தாதாரர்கள் 100 எஸ்டி சேனல்களுக்கு ரூ .130 + ஜி.எஸ்.டி + ஐசிஎஃப் என கூடுதல் 25 சேனல்களுக்கு ரூ .25 செலுத்த வேண்டும்.

தனியார் ஆப்ரேட்டர்கள்
டிடிஹெச் பயனர்களுக்கு இந்த நடைமுறை பிடிக்கவில்லை என்றால், டாடா ஸ்கை, சன் டைரக்ட் போன்ற நிறுவனங்கள் வழங்கும் என்சிஎப் தள்ளுடியில் பெறலாம். இதற்கு அந்த ஆப்ரேட்டர்களுக்கு அவர்கள் மாற வேண்டும்.


Click it and Unblock the Notifications