Home
News

இந்தியாவிற்குள் மீண்டும் வருகிறதா TikTok.. சைலென்ட்டாக 'இந்த' நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை..

பைட்டான்ஸ் (Bytedance) நிறுவனத்திற்குச் சொந்தமான வீடியோ தளமான TikTok இந்தியாவில் இருந்து மோசமான நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியேறியது. இதனால் ஆயிரக்கணக்கான TikTok படைப்பாளிகளின் கணக்கும் முடக்கப்பட்டது. தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையாக டிக்டாக்கை இந்திய அரசு தடை செய்தது என்பது நாம் அனைவரும் அறிந்தவொன்றே. இருப்பினும், TikTok மீண்டும் இந்தியாவிற்குள் வருவதற்கு முயற்சி செய்து வருகிறது.

'இந்த' நிறுவனத்துடன் சைலென்ட்டாக நடத்தப்படும் பேச்சுவார்த்தை

'இந்த' நிறுவனத்துடன் சைலென்ட்டாக நடத்தப்படும் பேச்சுவார்த்தை

டிக்டோக் உரிமையாளர்கள் இந்தியாவில் புதிய கூட்டாளர்களைத் தேடுவதால் இப்போது விஷயங்கள் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் வீடியோ பகிர்வு தளத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு பைடேன்ஸ் நிறுவனம், தற்போது இந்தியாவில் உள்ள ஹிரானந்தனி (Hiranandani) குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் செய்திகள் கசிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை சைலென்ட்டாக நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஹிரண்டந்தானி குழுமம் இந்தியாவில் என்ன செய்கிறது தெரியுமா?

ஹிரண்டந்தானி குழுமம் இந்தியாவில் என்ன செய்கிறது தெரியுமா?

ஹிரண்டந்தானி குழுமம் மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் திட்டங்களைக் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒன்றாக இருக்கிறது. ரியல் எஸ்டேட் நிறுவனமானது Yotta Infrastructure Solutions இன் கீழ் தரவு மைய செயல்பாடுகளையும் நடத்துகிறது மற்றும் சமீபத்தில் தொழில்நுட்பம் சார்ந்த நுகர்வோர் சேவைகள் arm-Tez தளங்களைக் கூட இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, இரு நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்போது "ஆராய்வு கட்டத்தில்" உள்ளன.

TikTok இன் இந்த முயற்சி குறித்து இந்திய அரசாங்கம் என்ன சொல்கிறது?

TikTok இன் இந்த முயற்சி குறித்து இந்திய அரசாங்கம் என்ன சொல்கிறது?

TikTok இன் இந்தத் திட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியீட்டிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், எங்களுடன் இதுவரை முறையான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இந்த திட்டங்கள் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பு அதிகாரி கூடியுள்ளார். அதேபோல், TikTok எங்களிடம் ஒப்புதலுக்கு வரும்போது, ​​அவர்களின் கோரிக்கையை நாங்கள் பரிசீலிப்போம், என்று ஒரு அரசாங்க அதிகாரி கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கம் மீண்டும் TikTok ஐ அனுமதிக்குமா?

இந்திய அரசாங்கம் மீண்டும் TikTok ஐ அனுமதிக்குமா?

இருப்பினும், சீனாவுடனான நீண்டகால சிக்கல்களுக்குப் பிறகு, சீனாவால் இயங்கும் செயலியை இந்தியாவில் மீண்டும் தொடங்க இந்திய அரசாங்கம் அனுமதிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. டிக்டோக் பிரதிநிதி ஒருவர், நிறுவனம் இந்தியப் பயனர்களுடன் மீண்டும் இணைவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக TikTok தடை செய்யப்பட்டது என்பதை யாரும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எதற்காக TikTok முடக்கம் செய்யப்பட்டது?

எதற்காக TikTok முடக்கம் செய்யப்பட்டது?

வீடியோ பகிர்வு தளம் இந்தியப் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளைச் சேமித்து வைப்பது கண்டறியப்பட்டது. சேமிக்கப்பட்ட தகவல்கள் சீனாவில் உள்ள அரசு விற்பனை நிலையங்களுடன் பகிரப்படுவதாக இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் குற்றம் சாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிக்டாக் மீண்டும் இந்திய நாட்டிற்குத் திரும்பினால், அவர்கள் இந்தியச் சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் இந்த முறை மிகவும் உறுதியாக உள்ளது.

இனி இந்த விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்

இனி இந்த விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்

இதன்படி, முக்கியமான பயனர் தரவு எதுவும் இந்தியாவுக்கு வெளியே சேமிக்கப்படக்கூடாது. எல்லா பயன்பாடுகளும் இணையதளங்களும் உள்ளூரில் தரவைச் சேமிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன அல்லது அவற்றின் தரவு சேமிப்பு மற்றும் செயலாக்கக் கொள்கைகளில் தேவையான மாற்றங்களைச் செய்து வருகின்றன. டிக்டாக் மீண்டும் திரும்பி வந்தால், அவர்கள் இந்த விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும், என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட TikTok

இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட TikTok

TikTok இந்தியாவில் ஒரு பெரிய பயனர் தளத்தைக் கொண்டுள்ளது. இது சீனாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். மேலும், 2019 ஆம் ஆண்டில், 15 வினாடி வீடியோ இயங்குதளமானது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்பாடாக இருந்தது. இது பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் இது வேலை வாய்ப்புகளை வழங்கியது என்பதும் உண்மை.

Best Mobiles in India

English summary
Bytedance Owned TikTok Is coming Back To India Soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X