பிஎஸ்என்எல்-ன் இந்த ஆபர் மே 19-வரை நீட்டிப்பு.! தினசரி 5ஜி டேட்டா.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அருமையான சலுகையை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்தவகையில் இந்நிறுவனம் தனதுWork@Home விளம்பர பிராட்பேண்ட் திட்டத்தின் செல்லுபடியை மே 19 வரை நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய அணுகலை வழங்குவதற்காக அறிவித்தது. இந்த லாக்டவுன் விளைவாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய சமூக தொலைதூரத்தைஊக்குவிப்பதற்கும்,சந்தாதாரர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிப்பதற்கும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த திட்டம் அனைத்து பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சந்தாதாரர்களும் 10எம்பிபிஎஸ் வரையிலான பதிவிறக்கவேகம் கொண்ட 5ஜிபி டேட்டா/நாள் நன்மையை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த விளம்பர பிராட்பேண்ட் திட்டத்தை ஆரம்பத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வரை மட்டுமேஅணுக கிடைக்கும் என்று கூறி இருந்தது. ஆனால் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் "வொர்க்@ஹோம்"
விளம்பர பிராட்பேண்ட் திட்டத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி மே 19வரை திட்டத்தின் கிடைக்கும் தன்மையைக் காட்டும் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அருமையான திட்டம் ஆனது அந்தமான், நிக்கோபார் வட்டம் உட்பட அனைத்து வட்டங்களிலும் அணுக கிடைக்கிறது, மேலும் குறிப்பாக வொர்க்@ஹோம் பிராட்பேண்ட் திட்டமானது தினசரி 5ஜிபி டேட்டா ஒதுக்கீட்டை 10எம்பிபிஎஸ் வேகத்தின் கீழ் வழங்கும்.பின்பு இந்த வரம்பை மீறிய பின்னர் இணைய வேகமானது 1Mbps ஆக குறையும்.

குறிப்பாக இதற்கு எந்த மாத கட்டணமும், பாதுகாப்பு வைப்பு தொகையும் தேவையில்லை, எனவே தற்போதுள்ள வாய்ஸ் கால் சந்தாவில் எந்த மாற்றங்களும் இருக்காது மற்றும் லேண்ட்லைன் திட்டத்தின்படி அழைப்பு கட்டணங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சந்தாதாரர்கள் கட்டணமில்லா எண் 1800-345-1504-ஐ டயல்செய்வதன் மூலம் இந்த புதிய பிராட்பேண்ட் திட்டத்தை பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








