Just In
- 4 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 4 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 5 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 7 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
BSNL வைத்த ஆப்பு.. முக்கிய ரீசார்ஜ் திட்டங்கள் இனி கிடையாது! ஏன் தெரியுமா?
தனியார் நிறுவனங்களுடன் விடாப்பிடியில் போட்டிப்போட்டு வருகிறது BSNL நிறுவனம். அனைவருக்கும் விரைவில் 5ஜி என்ற முழக்கத்துக்கு நடுவில் விரைவில் நாடு முழுவதும் 4ஜி என்ற கோஷத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் நடக்கும் போட்டிகள் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் இதை கவனிப்போம்.
இந்த நேரத்தில் இது தேவையா?
BSNL நாட்டின் மிகப்பெரிய இணைய சேவை வழங்குனர்களில் ஒன்றாகும். பிராட்பேண்ட் திட்டங்களில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனமாக இருந்த பிஎஸ்என்எல் சமீப காலமாக இதிலும் சரிவை சந்திக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் இரண்டு பிரபல திட்டங்களை விரைவில் நிறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அந்த இரண்டு திட்டங்களின் விலை என்ன?
நீக்கப்படும் இரண்டு திட்டங்களில் ஒன்றின் விலை ரூ.275 ஆகும். அடுத்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை என்னவென்று கேட்டால், அதன் விலையும் அதேதான். அதாவது இரண்டு ரீசார்ஜ் திட்டங்களும் ஒரே விலையில் சிறிய அளவிலான வித்தியாசமான பலன்களைக் கொண்டிருக்கிறது.
ஒரு திட்டம் 30 Mbps வேகத்தில் 3300GB வரை டேட்டாவை வழங்குகிறது, மற்றொன்று 3300GB வரையிலான டேட்டாவுடன் 60 Mbpsஐ வழங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 2 எம்பிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும். இரண்டு திட்டங்களிலும் குரல் அழைப்பு நன்மைகள் வழங்கப்படுகிறது.
இருப்பினும் இது பிராட்பேண்ட் திட்டம் என்பதால் வாய்ஸ் காலிங் கருவிக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த 2 திட்டங்களும் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
இரண்டு திட்டங்களிலும் உள்ள வித்தியாசம் 30 எம்பிபிஎஸ் வேகம் மற்றும் 60 எம்பிபிஎஸ் வேகம் மட்டுமே ஆகும்.
உடனே இதை ரீசார்ஜ் செய்வது நல்லது
இந்த இரண்டு திட்டங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ரீசார்ஜ் திட்டத்தை நவம்பர் 15 முதல் நிறுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டங்களில் நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால் உடனே இதை ரீசார்ஜ் செய்வது நல்லது.
பிஎஸ்என்எல் மட்டும் விதிவிலக்க அல்ல
பிஎஸ்என்எல் இன் 4ஜி சேவைக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சமீபத்தில் அறிமுகமான ஜியோ, அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் தூக்கி சாப்பிட்டிருக்கிறது. இதில் பிஎஸ்என்எல் மட்டும் விதிவிலக்க அல்ல.
லேண்ட்லைன் சேவையில் முதல் இடம்
குறிப்பாக ஜியோ நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு தான் லேண்ட்லைன் வசதியை அறிமுகம் செய்தது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக லேண்ட்லைன் சேவையை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சேவையில் பின்தங்கி இருந்தாலும் கூட லேண்ட்லைன் சேவையில் முதல் இடம் வகித்து வந்தது.
லேண்ட்லைன் சேவையில் பிஎஸ்என்எல்
இந்நிலையில் 22 ஆண்டுகளாக லேண்ட்லைன் சேவையை வழங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை 3 ஆண்டுகளுக்கு முன் லேண்ட்லைன் சேவையை தொடங்கிய ஜியோ பின்னுக்கு தள்ளி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லேண்ட்லைன் சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஜியோ முதல் இடத்தை பிடித்துள்ளது.
சந்தாதாரர்கள் எண்ணிக்கை என்ன?
கடந்த ஆக்ஸ்ட் மாத நிலவரப்படி இந்தியாவில் சுமார் 2.59 கோடி பேர் லேண்ட்லைன் சேவையை பெற்றுள்ளனர். மேலும் ஜியோ நிறுவனம் 73.4 லட்சம் சந்தாதாரர்களையும், பிஎஸ்என்எல் நிறுவனம் 71.3 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் 62 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டு 3-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனம் 15,000 லேண்ட்லைன் சந்தாதாரர்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னடைவை சந்திக்கும் டெலிகாம் நிறுவனம்
அதேசமயம் ஜியோ நிறுவனம் 2.62 லட்ச சந்தாதாரர்களையும், ஏர்டெல் நிறுவனம் 1.19 லட்ச சந்தாதாரர்களையும் புதிதாக பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வீடுகள், அலுவலகம் என அனைத்திலும் பிஎஸ்என்எல் இணைப்பு இருந்த காலம் மாறி 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்பு பிஎஸ்என்எல் அதிக பின்னடைவை சந்தித்து வருகிறது என்பது தான் உண்மை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470