அதிகரிக்கிறது பிஎஸ்என்எல் வேகம் : என்னென்ன முன்னேற்றங்கள்?
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் எப்எம்சி உடன் 2எம்பிபிஎஸ் இலிருந்து 4எம்பிபிஎஸ் வரை எந்த கூடுதல் செலவுமின்றி நியாயமான பயன்பாட்டுக் கொள்கையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பிராட்பேண்ட் வேகத்தை குறைந்தபட்சம் 4 எம்பிபிஎஸ் ஆக உயர்த்தியுள்ளது. வரம்பற்ற பிராட்பேண்ட் திட்டங்கள் மே1 2017 முதல் 675 ரூபாயுடன் தொடங்கியது, இவை பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தற்போதைய, புதிய பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் கிடைக்கும் வண்ணம் அறிவிக்கப்பட்டுள்ளது, வரம்பற்ற பி.பி. திட்டங்களை ரூ. 675 - மேலும் பல திட்டங்கள் கொண்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்:
இந்த திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் தற்போதுள்ள அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களின் வேகம் (பான் இந்தியா ஃ வட்டம் குறிப்பிடத்தக்கது) எப்எம்சி உடன் 2எம்பிபிஎஸ் இலிருந்து 4எம்பிபிஎஸ் வரை எந்த கூடுதல் செலவுமின்றி நியாயமான பயன்பாட்டுக் கொள்கையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வாடிக்கையாளர்கள்:
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்புகள் பொருத்தமாட்டில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்தத் திட்டம் உள்ளது என பிஎஸ்என்எல் போர்டு இயக்குநரான என்.கே.குப்தா அறிவித்தார்.இதற்கு மேலதிகமாக, பல்வேறு ப்ராட்பேண்ட் திட்டங்களில் நிறுவனம் எப்யுபி தரவு வரம்பை அதிகரித்துள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்பு:
அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை பயன்படுத்தி இத்திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம், மேலும், பிஎஸ்என்எல் இலவச எண்ணை அழைப்பதன் மூலம் புதிய பிராட்பேண்ட் இணைப்பு பெறமுடியும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோள்:
பிஎஸ்என்எல் சமீபத்தில் பிஎஸ்என்எல் செயற்கைக்கோள் சேவையை வழங்கி சர்வதேச மொபைல் சேட்டிலைட் ஆர்கனைசேஷன் தொடங்கியது, மேலும் இவை அரசாங்க முகவர் நிறுவனங்களுக்கு மட்டுமே தற்போது கிடைக்கும், பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனோஜ் சின்கா:
தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா கூறுகையில் மாநில போலீஸ், ரயில்வே, பார்டர் செக்யூரிட்டி படை மற்றும் பிற அரசு ஏஜென்சிகள் கையாளப்படும் நிறுவனங்களுக்கு இந்த சேவை முதலில் வழங்கப்படும் என அறிவித்தார். பின்னர் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் பயணிக்கும் மக்கள் தொழைப்பேசிக்கு இந்த சேவை பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications