Home
News

தமிழகத்தில் அதிவேகத்தில் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல் 4ஜி.!

இந்தியாவில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வருகின்றது. அரசு துறையான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை துவங்காமல் இருந்தது. பல பொது மக்களையும

இந்தியாவில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வருகின்றது.

அரசு துறையான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை துவங்காமல் இருந்தது.

தமிழகத்தில் அதிவேகத்தில் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல் 4ஜி.!

பல பொது மக்களையும் சிரமத்திற்கு ஆளாக்கியது. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் ஏன் 4ஜி சேவையை துவங்கவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி கேட்டு வந்தனர்.

தனக்கே வாடிக்கையாளர்களை கைவசம் வைத்து இருந்தும் பிஎஸ்என்எல் நிறுவனம் துவங்காமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அத்திமரத்தில் பூ பூத்து போல் பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாட்டில் தற்போது 4ஜிசேவையை விரிவுபடுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

4ஜி சேவை வழங்கும் நிறுவனங்கள்:

4ஜி சேவை வழங்கும் நிறுவனங்கள்:

இந்தியாவில் 4ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வருகின்றன. இதில் அதிவேகமாக நாம் இணையத்தையும் பெற முடியும். நாம் தரவுகளையும் வேகமாக இயக்க முடியும்.
அடுத்த நொடிப் பொழுத்தில் நாம் தேடியதையும் எளிதாக 4ஜி சேவையில் பெற முடியும்.
ஆனால் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் மட்டும் எப்போது, 4ஜி சேவையை துவங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

அத்திர மரத்தில் பூத்தது பூ:

அத்திர மரத்தில் பூத்தது பூ:

தமிழ்நாடு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பொதுமேலாளர் ராஜூ திருச்சியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்கப்பட்டது.

அதிவேகத்தில் கலக்குகிறது :

அதிவேகத்தில் கலக்குகிறது :

மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் 4ஜி சேவையை விட பி.எஸ்.என்.எல் அதிவேகமாக இருப்பதால், இதில் அதிகமான வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

இதுவரையில் சேலம், கோவை மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் பேர் பிஎஸ்என்எல் 4ஜி இணைப்பைப் பெற்றுள்ளனர்.

 விரிவாக்கம் செய்யப்படுகின்றது :

விரிவாக்கம் செய்யப்படுகின்றது :

இந்த நிலையில், தற்போது இதன் அடுத்தக்கட்டமாக திருச்சி, மதுரை, நாகை ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்திற்குள்ளாக 4ஜி சேவை தொடங்கப்படும். விரைவில் தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரிவாக்கம் செய்யப்படும்.

இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 5ஜி சேவைகள் தொடர்பான ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது' இவ்வாறு தமிழ்நாடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் ராஜூ தெரிவித்துள்ளார்.

5ஜிக்கு பிஎஸ்என்எல் ஆயத்தம்:

5ஜிக்கு பிஎஸ்என்எல் ஆயத்தம்:

உலகில் 4ஜி நெட்வொர்க்கை தாண்டி 5ஜி வந்து விட்டது. அதற்கு ஏற்ப சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் ஆகிவிட்டது.

மேலும், லெனவோ 5ஜி லேப்டாப்,ரெட்ம 5ஜி ஸ்மார்ட்போன் ஆகியவை விரைவில் அறிமுகமாக உள்ளது. இவ்வாறு தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரும் அடுத்தக்கட்ட முன்னேற்றத்தில் செல்லும் நிலையில், பிஎஸ்என்எல் இப்போது தான் 4ஜி சேவையை கொண்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
bsnl to roll out 4g services in all over tamilnadu : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X