Home
News

நோக்கியா + பிஎஸ்எஸ்எல் + ஒப்பந்தம் = 5ஜி.!

4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு ஒரு மென்மையான பரிணாம வளர்ச்சி.!

By Muthuraj

இந்தியா, 5ஜி டெலிகாம் நெட்வர்க்தனை ஏற்க மிக ஆர்வமாக இருக்கிறது என்று சமீபத்தில் டெலிகாம் செயலாளர் கூறியதில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பது இப்போது புரிகிறது.

தென் கொரியா அதன் 2018 குளிர்கால ஒலிம்பிக் நேரத்தில் 5ஜி நெட்வொர்க் சேவைகளை பயன்படுத்தும் முதல் நாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்தியா அடுத்த தலைமுறை தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஆரம்ப சலனத்தை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளது என்றும் திரு.தீபக் தெரிவித்திருந்தார்.

நாம் 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை சற்று தாமதமாக பெற்றோம் என்பதாலேயே 5ஜி தொழில்நுட்பத்தை இழந்து விடக்கூடாது என்று இந்தியா மிகவும் ஆர்வமாக உள்ளது.!

முதல்கட்ட அதிகாரப்பூர்வமான நடவடிக்கை

முதல்கட்ட அதிகாரப்பூர்வமான நடவடிக்கை

இது ஒரு தொடர்பு பிரச்சினையோ அல்ல ஒரு உற்பத்தி பிரச்சினையோ அல்ல, இது ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் கட்டங்கள் மற்றும் அது சார்ந்த விடயங்கள் மீதா அனைத்து வகையான பரந்த பயன்பாடுகளை சார்ந்த விடயம்" என்றும் அவர் கூறியிருந்தார். இதோ அதற்கான முதல்கட்ட அதிகாரப்பூர்வமான நடவடிக்கையை எடுத்துள்ளது நோக்கியா - பிஎஸ்என்எல் கூட்டணி.!

புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நேற்று நிகழ்ந்த மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் நோக்கியா நிறுவனம் உடனான ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 5ஜி மற்றும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் பயன்பாடுகள் ஆகிய பகுதிகளில் இணைந்து பணியாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மூலோபாய ஒத்துழைப்பு

மூலோபாய ஒத்துழைப்பு

உடன் இந்த கூட்டணி மூலம் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு ஒரு மென்மையான பரிணாம வளர்ச்சி மற்றும் மாற்ற மூலோபாய ஒத்துழைப்பு உறுதி செய்யப்படும். உடன் இதனுள் 5ஜி செயல் விளக்கம், ஐஓடி ஆப்ஸ் மற்றும் இதர செயல்பாடுகளிலும் இக்கூட்டணி ஈடுபடும்.

கட்டமைப்பை வரைய உதவும்

கட்டமைப்பை வரைய உதவும்

"4ஜி தொழில்நுட்பத்திற்கு பிறகு, 5ஜி மற்றும் ஐஓடி தான் எதிர்காலமாகும் குறிப்பாக ஸ்மார்ட் நகரங்களில் போன்ற கருத்துகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது எதிர்காலத்திற்க்கான 5ஜி நெட்வொர்க்கை தற்போதைய 4ஜி நெட்வொர்க் உடனான ஒரு கட்டமைப்பை வரைய உதவும்" என்று பிஎஸ்என்எல் தலைவர், அனுபம் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.

பொது களத்தில்

பொது களத்தில்

மேலும், இந்த இரண்டு நிறுவனங்களும் 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவைகளை ஒரு பொது களத்தில் பகிர்ந்து கொள்ளும். உடன் இந்திய சந்தையில் சாத்தியமான 5ஜி மற்றும் ஐஓடி செயல்முறை விளக்கங்களையும் இந்த கூட்டணி நிகழ்த்தும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அறிமுகம் : நோக்கியா 3, நோக்கியா 5 (விலை, அம்சங்கள், இந்திய வெளியீடு).!

Best Mobiles in India

English summary
BSNL to sign MoU with Nokia on 5G, IoT applications. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X