அதிரடியாக வேலிடிட்டியை அதிகரித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.! ப்ரீபெய்ட் திட்டங்களில் மாற்றம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்களுக்குப் பல புதிய சலுகை மற்றும் அதிக பலன் தரக்கூடிய திட்டங்கள் அறிமுகம் செய்து வருகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்களுக்குப் பல புதிய சலுகை மற்றும் அதிக பலன் தரக்கூடிய திட்டங்கள் அறிமுகம் செய்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் நிறுவனம் தனது நீண்டகால திட்டங்களில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

ரூ.666 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம், தற்பொழுது இரண்டு நீண்டகாலத் திட்டங்களைத் தனது பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வந்த ரூ.666 திட்டத்தில் சில மாற்றங்களையும் செய்துள்ளது.

தினமும் 3.7 ஜிபி டேட்டா
பிஎஸ்என்எல் நிறுவனம், அறிமுகம் செய்த ரூ.666 என்ற சிக்ஸர் பேக், தினமும் 3.7 ஜிபி டேட்டா சேவையை 122 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கி வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-களை வழங்கி வருகிறது.

134 நாட்களாக அதிகரிப்பு
தற்பொழுது இந்த ரூ.666 சிக்ஸர் பேக் திட்டத்தின் வேலிடிட்டியை 134 நாட்களாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகரித்துள்ளது. தற்பொழுது இந்த திட்ட அடிப்படையில் பயனர்கள் ரூ.666 திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.999 மற்றும் ரூ.2,099 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.999 மற்றும் ரூ.2,099 என்ற இரண்டு நீண்டகால ப்ரீபெய்ட் திட்டங்களைத் தனது பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் இந்த திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் முன்பு வழங்கி வந்த ரூ.1,699 நீண்டகால ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications