84 நாட்களுக்கு தினசரி 5 ஜிபி டேட்டா: எல்லாரைவிடவும் இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் தான் டாப்!
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.599 விலையில் தினசரி 5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு வழங்கும் சிறந்த திட்டங்களில் ரூ.599 திட்டம் ஒன்றாகும். பிஎஸ்என்எல் வழங்கும் இந்த திட்டம் பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விஐ போன்ற ரூ.600 விலையில் 84 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. இருப்பினும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிட பிஎஸ்என்எல் அதிக நன்மைகளை வழங்குகிறது.

ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற காம்போ திட்டமாகும். இதில் குரல் அழைப்பு, எஸ்எம்எஸ், டேட்டா நன்மை என பல சலுகைகள் உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 5ஜிபி டேட்டா வழங்குகிறது.

84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம்
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.599 திட்டமானது 84 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் மொத்தம் செல்லுபடியாகும் காலத்திற்கு 420 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்புகள் வழங்கப்படுகிறது. வரம்பற்ற அழைப்புகள் என தெரிவிக்கப்பட்டாலும் இணையத்தில் வழங்கப்பட்டுள்ள தகவலின்படி 250 நிமிடங்கள் என்ற வரம்பில் அழைப்பு நன்மைகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்ஃயூபி வரம்பு தள்ளுபடி செய்யப்படும் என தகவல்
இருப்பினும் ஜனவரி 10, 2021 முதல் குரல் அழைப்புக்கான எப்ஃயூபி வரம்பு தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. ரூ.599 பிஎஸ்என்எல் திட்டமானது செல்லுபடியாகும் காலம் முழுவதுக்கும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.

4ஜி தளங்களில் 4ஜி இணைய வேகத்தை பயன்படுத்தலாம்
நாடு முழுவதும் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்த பிஎஸ்என்எல் தயாராகி வரும் நேரத்தில் பிஎஸ்என்எல் ரூ.599 திட்டத்தில் தினசரி 5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தற்போதுவரை இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் 3ஜி இணைய வேகம் கிடைக்கும் பகுதிகளில் 3ஜி சேவையாகவும், 4ஜி இணைய வேகம் கிடைக்கும் பகுதிகளில் 4ஜி இணைய சேவையாகவும் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications