பிரமாண்ட வரவேற்பு:BSNL ரூ.499 திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.,என்னென்ன சலுகை தெரியுமா
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டமான ரூ.499 பிளான் வருகிற 10 ஆம் தேதியோடு நிறைவுபெற இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான பாரத சஞ்சார் நிகம் லிமிடெட்
அரசுக்கு சொந்தமான பாரத சஞ்சார் நிகம் லிமிடெட்(பிஎஸ்என்எல்) தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. பிஎஸ்என்எல் அறிவிக்கும் சலுகைகள் மூலம் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைப்பதடு அதிகரிக்கவும் செய்து வருகிறது.

பிஎஸ்என்எல் வழங்கும் பல்வேறு திட்டங்கள்
பிஎஸ்என்எல் வழங்கும் பல்வேறு திட்டங்களும் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கும் விதமாகவே உள்ளது என கூறலாம். குறிப்பாக பிஎஸ்என்எல் பயனர்கள் ஏணையோர் நீண்ட நாட்கள் திட்டத்திலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஜூன் 10 ஆம் தேதியோடு காலவதி
பிஎஸ்என்எல் வழங்கும் பிராட்பேண்ட் திட்டம் குறித்து பார்க்கையில், நிறுவனம் வழங்கும் ரூ.499 திட்டமானது முன்னதாக ஜூன் 10 ஆம் தேதியோடு காலவதியாகும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பிராட்பேண்ட் திட்டமானது செப்டம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.499 பிராட்பேண்ட் திட்டம்
ரூ.499 பிராட்பேண்ட் திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டமானது 300 ஜிபி தரவோடு வருகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 300 ஜிபி டேட்டா 40 எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கிறது. இந்த தரவு தீர்ந்தவுடன் இதன் வேகம் 1 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். அதேபோல் இந்த நெட்வொர்க்கில் வரம்பற்ற குரல் அழைப்பு, சந்தா சலுகையும் கிடைக்கிறது. இது மேற்குவங்கம், கொல்கத்தா, சிக்கிம் போன்ற பகுதிகளுக்கு பொருந்தும்.

வரம்பற்ற குரல் அழைப்பு
பிவி 365 திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. இணையம் முடிந்த பிறகு 80 கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற இணைய சேவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 60 நாட்களுக்கு ஒரு நாளுக்கு 250 நிமிடங்கள் என வழங்கப்படுகிறது. அதோடு பயனர்களுக்கு அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படும்.

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் போன்ற வட்டாரங்கள்
இந்த பிவி 365 திட்டமானது சென்னை தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் போன்ற வட்டாரங்களில் இந்தியா முழுவதும் உள்ள பல பிஎஸ்என்எல் வட்டங்களில் கிடைக்கிறது.

ரூ.2 விலையில் திட்டம்
அதேபோல் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் பிஎஸ்என்எல் புது திட்டம் ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது. அது ரூ.2-க்கான திட்டம், இந்த திட்டமானது வேலிடிட்டி நீட்டிப்பு திட்டமாகும், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டத்தின் கால அவகாசம் நிறைவடைந்துவிட்டால் ரூ.2-க்கு ரீசார்ஜ் செய்து கால அவகாசத்தை நீட்டிக்கலாம். ரூ.2-க்கு ரீசார்ஜ் செய்யும் போது திட்டம் வேலிடிட்டி மூன்று நாட்கள் சலுகை காலம் நீட்டிப்பு வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications