பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.!
குறிப்பாக வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் 102 புதிய 3ஜி கோபுரங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜியோ வருகைக்குப் பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவித்த வண்ணம் உள்ளது,இருந்தபோதிலும் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையுடன் சிறந்த டேட்டா நன்மைகள் மற்றும் அதிக நாள் வேலிடிட்டி தருவதால் பெரும்பாலும் மக்கள் ஜியோவையே அதிகம் தேர்வு செய்கின்றனர்.

அன்மையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படவுள்ளதாக கிளம்பிய வதந்தி அதிக பரபரப்பை ஏற்படுத்தியது என்று தான் கூறவேண்டும். ஆனால் பிஎஸ்என்எல் கிராமம் முதல் நகரம் வரை சிறந்த சேவையை வழங்கிவருவதும் என்பதும் உண்மை. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவையை மேம்படுத்தி பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவர தயார் நிலையில் உள்ளது.
{photo-feature}


Click it and Unblock the Notifications








