Just In
- 6 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 6 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 7 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 7 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பிஎஸ்என்எல் அதிரடி: மொத்த ரீசார்ஜ்களையும் திருத்தியது; ஜன.15 முதல் அமல்.!
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் மீண்டும் இந்திய டெலிகாம் துறைக்குள் நடக்கும் கட்டண யுத்தத்திற்குள் நுழைந்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவின் அறிமுகத்தை தொடர்ந்து மிகவும் வேகமான நடவடிக்கைகளை கையாண்ட பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஜியோவிற்கு எதிரான கட்டண திட்டங்களை அறிமுகம் செய்து அசத்தியது.

அதன் பின்னர் சற்று பொறுமையாக பின்வாங்கி, சந்தையில் நடக்கும் கட்டண யுத்தத்தை வேடிக்கை பார்த்த பிஎஸ்என்எல் சமீபத்தில் அதன் பிராதன திட்டங்களில் செல்லுபடியை குறைப்பது, நன்மைகளை குறைப்பது மற்றும் இரவு அழைப்புகள் மீதான வரம்பு ஆகிய திருத்தங்களை ஏற்படுத்தியது. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் போட்டியிடுவதை வெளிப்படையாக நிறுத்திக்கொண்டதை அறிய முடிந்தது. ஆனால் அது பின்வாங்குதல் அல்ல மாஸ்டர் பிளான் என்பது நேற்று மாலை அம்பலமானது.

ஜனவரி 15, 2018 முதல் அமலுக்கு வரும்
சில மாத கால தாமதத்திற்கு பின்னர், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரூ.186/- திட்டம் தொடங்கி அதன் சிக்ஸர் 666 திட்டம் வரையிலாக அதன் மொத்த ரீசார்ஜ் திட்டங்களையும் அதிரடியான முறையில் திருத்தியுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் வருகிற ஜனவரி 15, 2018 முதல் அமலுக்கு வரும்.

ஆறு கட்டண திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன
இந்த திருத்தத்தில் ஒட்டுமொத்தமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆறு கட்டண திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. அவைகள் ரூ.186, ரூ.187, ரூ.349, ரூ.429, ரூ.485 மற்றும் ரூ.666 ஆகியவைகள் ஆகும். இந்த திட்டங்கள் அனைத்துமே ஜியோவின் சமீபத்திய அறிமுகங்களுடன் ஒற்றுப்போகும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் பிவி186
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நுழைவு நிலை திட்டமான ரூ.186/-ல் நிகழ்த்தப்பட்டுள்ள திருத்தங்களை பொறுத்தமட்டில், இனி இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலா டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

வீட்டு வட்டம் மற்றும் தேசிய ரோமிங் உட்பட
முன்னதாக, ரூ.186/- ஆனது வீட்டு வட்டத்திற்கான உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகளை மட்டுமே வழங்குமொரு திட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது ரூ.187/- திட்டத்தை போலவே இந்த திட்டமும் டேட்டா மற்றும் வாய்ஸ் என்கிற காம்போ நன்மைகளை வழங்குகிறது. ரூ.187/-ஐ பொறுத்தமட்டில் ரூ.186/-ன் நன்மைகளையே வழங்குகிறது. இங்கு வரம்பற்ற அழைப்புகள் என்பது வீட்டு வட்டம் மற்றும் தேசிய ரோமிங் உட்பட என்று அர்த்தம்.

இனி 54 நாட்களுக்கு செல்லுபடியாகும்
திருத்தம் கண்டுள்ள மூன்றாவது திட்டமான ரூ.349/- ஆனது இனி அதே வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை இனி 54 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்

81 நாட்களுக்கு செல்லுபடியாகும்
மறுகையில் உள்ள ரூ.429/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில் அதே வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்கினாலும். ரூ.329/-ஐ விட இந்த திட்டம் அதிக செல்லுபடி காலம், அதாவது 81 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டா
திருத்தம் கண்டுள்ள ஐந்தாவது திட்டமான ரூ.485/- என்கிற நிறுவனத்தின் நீண்ட காலம் செல்லுபடியாகும் ரீசார்ஜ் நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குமொரு திட்டமாகும். இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் சமீபத்தில் 74 நாட்களாக குறைக்கப்பட்டது. தற்போது ஒரு விரைவான நடவடிக்கையாக ரூ.485/-ன் நன்மைகள் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 129 நாட்களுக்கு செல்லுபடியாகும்
இறுதியாக, ரூ.666/- கட்டண திருத்தத்தின் விவரங்களை காண்போம். பிஎஸ்என்எல்-ன் சிறந்த நன்மைகளை வழங்குமொரு திட்டமான ரூ.666/- ஆனது நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை இனி மொத்தம் 129 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

வரம்பற்ற ரோமிங் அழைப்பு நன்மை
சுமார் நான்கு மாத காலம் செல்லுபடியாகும் ரூ.666/- திட்டமானது, ரிலையன்ஸ் ஜியோவின் பல பிரதான திட்டங்களுக்கு கடும்போட்டியை உண்டாக்குமொரு ரீசார்ஜ் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த திட்டங்களின் வரம்பற்ற ரோமிங் அழைப்பு நன்மைகளானது (நிறுவனத்தின் சேவைகள் இல்லாத) மும்பை மற்றும் டெல்லிக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470