பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் அறிவித்த தரமான திட்டம்.! எங்கு கிடைக்கும்? என்னென்ன நன்மைகள்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. தற்சமயம் இந்நிறுவனம் தனது தனது 200Mbps பிராட்பேண்ட் திட்டத்தை தெலுங்கானா வட்டத்தில் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக ஃபைபர்-டு-ஹோம் திட்டம் முன்பு சென்னை மற்றும் தெலுங்கானா வட்டங்களில் கிடைத்தது. ஆனால் பின்னர் அது இரு வட்டங்களிலிருந்தும் அகற்றப்பட்டது. தற்சமயம் வெளிவந்த தகவலின் அடிப்படையில் பிஎஸ்என்எல் 200Mbps திட்டம் தெலுங்கானா வட்டத்தில் 2020 அக்டோபர் 19 வரை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொலைத் டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.1999-ஆகும்.

இந்த திட்டம் ‘Fibro Combo ULD 1999 CS55' என அழைக்கப்படுகிறது, பின்பு இது 200 Mbps வேகத்தை வழங்குகிறதுஇ மேலும் இது 1500 ஜிபி வரை தரவுடன் வருகிறது. தரவு வரம்பு தீர்ந்தவுடன், பயனர்கள் 2Mbps வேகத்தைக் குறைத்து இணையத்தில் உலாவலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டம் அரை ஆண்டு, வருடாந்திர, இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு சந்தாவுடன் கிடைக்கிறது.

இதற்குமுன்புபிஎஸ்என்எல் நிறுவனம் தனது லேண்ட்லைன் பயனர்களுக்கு 6பைசா கேஷ்பேக் சலுகையை மீண்டும் ஒருமுறை நீடித்துள்ளது, அதன்படி இந்த சலுகை வரும் ஆகஸ்ட் மாதம் 31-ம் வரை கிடைக்கிறது.

அதாவது கடந்த வருடம் ஆறு பைசா கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டது, அதன் பின்னர் தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இது பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் முன்னதாக இந்த வாய்ப்பை ஜூலை 31 வரை நீட்டித்திருந்தது, ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் கேஷ்பேக் நன்மையை ஆகஸ்ட் 31-ம் தேதி வரைநீட்டித்துள்ளது. இந்நிறுவனம் அதன் தமிழ்நாடு ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக இந்த நீட்டிப்பு சார்ந்த தகவலை அறிவித்துள்ளது.

குறிப்பாக இந்த சலுகையின்படி பிஎஸ்என்எல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் லேண்ட்லைன் அழைப்புகளை செய்வதற்கு 6பைசாக்களை கேஷ்பேக்காக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர் "ACT" என்று டைப் செய்து அதன் பின்னர் தகுதிவாய்ந்த தொலைபேசி எண்ணுடன் அதன் எஸ்.டி.டி குறியீட்டையும் உடன் "6PAISA" என்பதை சேர்த்து 09478053334 என்ற எண்ணிற்கு பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பினால் இந்த சலுகையை பெறமுடியும்.

குறிப்பாக கேஷ்பேக் மூலம் கிடைக்கும் பணம் சந்தாதாருக்கு கேஷ்பேக் வடிவில் வரவு வைக்கப்படுகிறது. பின்பு நாடு முழுவதும் பிஎஸ்என்எல் வயர்லைன் பிராட்பேண்ட் மற்றும் ஃபைபர்-டு-ஹோம்(எஃப்.டி.டி.எச்) பயனர்களுக்கு இந்த அட்டகாச கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.600 பிராட்பேண்ட் திட்டத்தின் கிடைக்கும் தன்மையையும் நீட்டித்துள்ளது. இந்த விளம்பரத் திட்டம் கடந்த ஜூலை 27 ஆம் தேதியுடன் காலாவதியாகும் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் இந்த பிராட்பேண்ட் திட்டம் இப்போது நாடு முழுவதும் அக்டோபர் 27-ம் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications