இன்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த புதிய சலுகை என்னென்ன? வாங்க பார்ப்போம்.!
பிஎஸ்என்எல் ரூ.349- ப்ரீபெய்ட் திட்டதில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை என்னவென்றால் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 54 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.
தினசரி டெலிகாம் நிறவனங்கள் புதிய கட்டணத் திட்டங்கள் மற்றும் புதிய சிறப்பு சலுகையை அறிவித்தது, இன்று காலை வோடபோன் நிறுவனம் தனது 458 ரூபாய் திட்டத்தில் கூடுதல் டேட்டா திட்டத்தை அறிவித்தது, அதைத் தொடர்ந்து இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் கூடுதலான டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அறிவத்துள்ள புதிய சலுகைகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய சலுகைகளின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.349-திட்டம்:
பிஎஸ்என்எல் ரூ.349- ப்ரீபெய்ட் திட்டதில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை என்னவென்றால் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 54 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தில் 54ஜிபி டேட்டா கிடைக்கிறது. பின்பு இலவச வாய்ஸ் கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்; ரூ.349- ப்ரீபெய்ட் திட்டதில் தினசரி 1.5ஜிபி டேட்டா விதம் 70 நாட்களுக்க பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தில் 105ஜிபி டேட்டா வரை கிடைக்கிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல்:
ஏர்டெல் நிறுவனத்தின்; ரூ.349- ப்ரீபெய்ட் திட்டதில் தினசரி 3ஜிபி டேட்டா விதம் 28 நாட்களுக்க பயன்படுத்த முடியும். மேலும் இலவச வாய்ஸ்கால் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ.458/-திட்டம்:
வோடபோன் வழங்கும் ரூ.458/-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இப்போது தினசரி 2.8ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, அதன்பின்பு இந்த திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள், எஸ்எஸ்எம் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு இதே திட்டதில் தினசரி 1.4ஜிபி டேட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications