சிதற விட்ட சீதாராமன்.. வாய் பிளந்த அம்பானி, மிட்டல்.. BSNL-க்கான 2026 பட்ஜெட் எவ்ளோ தெரியுமா?
பிப்ரவரி 1, 2026 அன்று அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட் 2026 (Budget 2026) மூலம், அரசாங்கத்தின் கீழ் இயங்கும் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு ரூ.28,473 கோடியை பெற முன்மொழியப்பட்டு உள்ளது. இது தவிர, நிதியாண்டு 27க்கான பட்ஜெட்டில் தொலைத்தொடர்பு துறைக்கு (Telecom sector) ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் கடந்த நிதியாண்டு 26 பட்ஜெட்டில், அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஆன பிஎஸ்என்எல் ரூ.6,885 கோடியை பெற்றது. அதாவது நிதியாண்டு 27 இல், இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவிலான பட்ஜெட்டை அரசாங்கம் ஒதுக்கி உள்ளது; கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகம். கண்டிப்பாக அம்பானியும் (ஜியோ), மிட்டலும் (ஏர்டெல்) ஷாக் ஆகி இருப்பார்கள்!

பட்ஜெட் 2026 குறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆன ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், கடந்த ஆண்டு தொலைத்தொடர்புக்கு ரூ.53,000 கோடியாக இருந்த ஆர்இ (திருத்தப்பட்ட மதிப்பீடு) இல் இருந்து ஒதுக்கீட்டில் மிகவும் ஆரோக்கியமான அதிகரிப்பை கண்டுள்ளோம். நாங்கள் ரூ.73,000 கோடியாக வளர்ந்துள்ளோம். இது கிட்டத்தட்ட 40% ஆகும் என்று கூறியுள்ளார்.
மேலும் எங்கள் ஏஆர்பியு (ARPU - ஒரு பயனருக்கு சராசரி வருவாய்) கிட்டத்தட்ட 9 சதவீதம் அதிகரித்து ரூ.90 லிருந்து கிட்டத்தட்ட ரூ.99 ஆக உயர்ந்துள்ளதாக நான் உங்களிடம் குறிப்பிட்டேன். விரைவில் இது மூன்று இலக்கங்களை தொட விரும்புகிறோம். எங்கள் மூன்று துறைகளிலும் வருவாயை அதிகரித்துள்ளோம், இப்போது பிஎஸ்என்எல்-ஐ அதன் மறுமலர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, எங்கள் உள் பணப்புழக்கங்களுடன் இந்த மூலதனம் தேவை என்று அமைச்சர் கூறியுள்ளார்.
தொலைத்தொடர்புத் துறைக்கான அதிகரித்த பட்ஜெட்டில் கிராமப்புற பிராட்பேண்ட் திட்டமான பாரத்நெட்டுக்கான நிதியும் அடங்கும். பிஎஸ்என்எல்லை பொறுத்தவரை, 22,000 புதிய 4ஜி தளங்கள் அரசாங்கத்தால் பரிசீலனையில் உள்ளன. இந்த நிதி - பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வணிகத்தை அதிகரிக்க உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
பாரத்நெட்டிலில் பல சிக்கல்கள் உள்ளன. அதாவது பிஎஸ்என்எல்லின் ஸ்பெக்ட்ரமுக்கு ரூ.1,39,000 கோடி ஒதுக்கீடு - அதன் சொந்த உள் மூலதன தேவைகளுக்கு, அது டவர்களாக இருந்தாலும் சரி, மீடியாவாக இருந்தாலும் சரி, பேட்டரியாக இருந்தாலும் சரி, அனைத்து சிலிண்டர்களையும் பயன்படுத்த முயற்சிக்கிறோம் என்று சிந்தியா கூறி உள்ளார்
இதனுடன், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கிளவுட் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளது. இந்திய தரவு மையங்களில் முதலீடு செய்து, வெளியே சேவைகளை வழங்கும் வெளிநாட்டு கிளவுட் நிறுவனங்களுக்கு வரி இல்லாத சூழலை புதிய பட்ஜெட் முன்மொழிந்துள்ளது.
இதோடு பட்ஜெட் 2026 இல் ஐஎஸ்எம் 2.0 (ISM 2.0) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய செமிகண்டெக்டர் மிஷன் 2.0-வும் (India Semiconductor Mission 2.0) அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் தரவு மையங்களை அமைக்கும் கிளவுட் சேவைகளை வழங்கும் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் டேக்ஸ் ஹாலிடே (Tax Holiday) அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
சீதாராமன் அறிவித்துள்ள இந்திய செமிகண்டெக்டர் மிஷன் (ISM) 2.0 ஆனது நாட்டின் குறைக்கடத்தி தொழிற்துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் திட்டத்தின் ஆரம்ப பதிப்பை அடிப்படையாக கொண்டு, குறைக்கடத்திகளுக்கான தொழில்துறை தலைமையிலான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களை உருவாக்கும்.
ஐஎஸ்எம் 2.0-வை தொடங்குவதற்கான காலக்கெடுவை நிதியமைச்சர் குறிப்பிடவில்லை என்றாலும், மின்னணு கூறுகள் உற்பத்தி திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஐஎஸ்எம் 1.0 ஆனது 2021 ஆம் ஆண்டில் ரூ.76,000 கோடி ஆரம்ப செலவில் தொடங்கப்பட்டது. இது தவிர, ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அர்ப்பணிக்கப்பட்ட அரிய பூமி வழித்தடங்களையும் அமைச்சர் அறிவித்தார், இது குறைக்கடத்தித் தொழிலையும் மேம்படுத்தும்.
அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறை தொடர்பான அறிவிப்புகள்: 2026 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டின் போது இந்தியாவின் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறை மிகப்பெரிய ஊக்கத்தைப் பெற்றது. சீதாராமன் இதை ஒரு வளர்ந்து வரும் தொழில் என்று குறிப்பிட்டார். இதற்கு 2030 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மில்லியன் நிபுணர்கள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








