50% வரை தள்ளுபடி : பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு.!!
தொலைத்தொடர்பு சேவை வழங்குவதில் நிலவும் போட்டியை சமாளிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் அன்லிமிட்டெட் 3ஜி மொபைல் டேட்டா சேவையினை ரூ.1,099க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதோடு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த டேட்டா திட்டங்களில் கூடுதல் டேட்டா வழங்குதாகவும் அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் டெந்வர்க் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து பிஎஸ்என்எல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. அன்-லிமிட்டெட் 3ஜி சேவையை வேகம் குறையாமல் வழங்குவதில் நாட்டிலேயே பிஎஸ்என்எல் முன்னிலை வகிக்கின்றது. அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய திட்டம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கும் என பிஎஸ்என்எல் தலைவர் அனுப்பம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
இதையும் பாருங்கள் : ரிலையன்ஸ் ஜியோ மற்றும் லைஃப் ஸ்மார்ட்போன் ரூ.199 மட்டுமே??
பிஎஸ்என்எல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகின்றது. மொபைல் பிரிவு பொருத்த வரை ஏப்ரல் மாத நிலவரப்படி பிஎஸ்என்எல் சுமார் 11.39 லட்சம் சந்தாதாரர்களை புதிதாகச் சேர்த்துள்ளது. இந்த எண்ணிக்கையானது ஏர்டெல் (9.78 லட்சம்), ஏர்செல் (5.72 லட்சம்), ரிலையன்ஸ் (1.1 லட்சம்), வோடபோன் (46,600) என்ற நிலையில் இருக்கின்றது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனான போட்டியை சமாளிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவைக்கான கட்டணங்களை சுமார் 67 சதவீதம் வரை குறைத்திருக்கின்றது. மேலும் ரூ.549 திட்டத்தில் 5ஜிபி 3ஜி டேட்டாவினை தடாலடியாக சுமார் 10 ஜிபி வரை உயர்த்தி வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications