அதிகம் எதிர்பார்த்த BSNL-ன் இலவச 4ஜி சிம்.! அனைவருக்கும்.! ஆனால்...?
ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 4ஜி சேiயை ஏற்கனவே துவங்கி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் தளங்களை 4ஜி-க்கு மேம்படுத்த விரைவான வேகத்தில் செயல்பட்டு வருகிறது. எளிமையாக கூறவேண்டும் என்றால், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைக்காக ஒரு பெரிய திறக்கப்படாத சந்தையே காத்திருக்கிறது.

எனவே பிஎஸ்என்எல் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை உருவாக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சந்தையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தாமதமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பே சொன்னபடி வோடபோன், ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே 4ஜி சேவையை கொண்டுவந்து பல வாடிக்கையாளர்களை தன்வசம் ஈரத்துவிட்டனர். மேலும் அவர்களை தங்கள் பிராண்டுக்கு விசுவாசமாக ஆக்கியுள்ளன.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி மொபைல் சேவைகளை அறிமுகப்படுத்தும்போது, மற்ற டெலிகாம் வாடிக்கையாளர்களைஈர்க்கும் வகையில் சிறப்பான திட்டங்கள் மற்றும் அடேங்கப்பா என சொல்லவைக்கும் கொண்வர முயற்ச்சி செய்யும்.

ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுபோன்ற ஒரு சலுகையை ஏற்கனவே சந்தைக்கு கொண்டுவந்துள்ளது, அது பற்றி விவரம் தெரியுமா உங்களுக்கு? அது என்னவென்றால் தற்போதைய பிஎஸ்என்எல் சிம் கார்டை இலவசமாக 4ஜி சிம் கார்டாக மேம்படுத்தும் ஒரு சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

அதன்படி பிஎஸ்என்எல் அறிவித்துள்ள சிம் மேம்படுத்தல் திட்டம் ஆனது நீண்ட காலத்திற்கு இருக்காது என்றும், அரசுக்கு சொந்தமான
இந்த டெலிகாம் நிறுவனம் இதை 90நாட்களுக்கு மட்டுமே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த திட்டத்தின் கீழ் உங்கள் தற்போதைய சிம் கார்டுகள் மாற்றப்பட்டு உங்களுக்கு புதிய 4ஜி சிம் கார்டு வழங்கப்படும்.பின்பு இந்த சலுகை இந்தியாவின் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அன்று துவங்கப்பட்டது.

ஆனால் மக்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பிஎஸ்என்எல்லில் சேர்ந்து ரூ.100-க்கும் அதிகமாக ரீசார்ஜ்செய்யும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சிம் கார்ட் இலவசமாக வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








