பிஎஸ்என்எல்-ன் அன்லிமிடெட் அதிரடி, திகட்ட திகட்ட கொண்டாடு.!
இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தகவல்கள் இதோ.!
இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பிஎஸ்என்எல், அதன் உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினம் விளம்பரங்களின் ஒரு பகுதியாக, மே 17 முதல் மே 19 வரை இருக்கும் அற்புதமான நன்மைகளை வழங்கும் ஒரு திட்டத்தை தனது பயனர்களுக்கு வழங்கியுள்ளது.
ரூ.333/- என்ற இந்த புதிய திட்டத்தின்கீழ் பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு (மொத்தம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் இருப்பினும் குறிப்பிட்ட) மூன்று நாட்கள் வரம்பற்ற தரவை வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தகவல்கள் இதோ.!

3ஜிபி டேட்டா
இந்த எச்டிவி333 அல்லது "டிரிபிள் ஏஸ்" சலுகையின் கீழ் 90 நாட்களுக்கு நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின் (FUP) கீழ் நாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டா என்ற வண்ணம் வரம்பற்ற தரவை அனுபவிக்கலாம்.

3 நாட்களுக்கு
சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் (ITU) கருத்தின்படி பிஎஸ்என்எல் மே 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை எஸ்டிவி333-இன் கீழ் ஏற்கனவே இருக்கும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 3 நாட்களுக்கு உண்மையிலேயே வரம்பற்ற தகவல்களை வழங்க முடிவு செய்துள்ளது.

எச்டிவி 333
பிஎஸ்என்எல் அதன் எச்டிவி 333 திட்டத்தை எச்டிவி 349 அல்லது தில் கோல் கே போல் மற்றும் எச்டிவி395 அல்லது நெஹ்லா பெர் டெஹ்லா திட்டங்களுடன் சேர்த்து அறிமுகம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எச்டிவி349
எச்டிவி349-ன் கீழ் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவிலான தரவு ஆகிய நன்மைகளை பயனர் 28 நாட்களுக்கு அனுபவிக்கலாம்.

எச்டிவி395
மறுகையில் பிஎஸ்என்எல் எச்டிவி395 திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான தரவையும், 3000 பிஎஸ்என்எல் உடன் பிஎஸ்என்எல் இலவச நிமிடங்களும் மற்றும் பிற நெட்வொர்க்குகளில் 1800 இலவச நிமிடங்களும் வழங்குகிறது. இது 71 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாகும்.


Click it and Unblock the Notifications