200 ஜிபி டேட்டா ஆப்பரை அறிவித்த பிஎஸ்என்எல்.!
ரூ.950க்கு 200 ஜிபி வழங்கும் பிராட் பேண்ட் திட்டப்படி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.500 தவணை முறையில் செலுத்திக் கொள்ளலாம்.
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 200 ஜிபி டேட்டா ஆப்பரை அறிவித்துள்ளது.

இந்த ஆப்பரை ரூ.995க்கு பிராட் பேண்ட் இணைப்பில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு குறித்து இனி விளக்கமாக காணலாம்.

200 ஜிபி பிராட் பேண்ட் ஆப்பர்:
200 ஜிபி பிராட் பேண்ட் சலுகையை 20 எம்பிஎஸ் வேகத்தில் அனுபவிக்க முடியும். இதற்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.995க்கு இதனை பெறலாம். இந்த ஆப்பர் காலவதியாகும் போது, ரூ.2 ஜிபி வேகத்தில் பிராட் பேண்ட் இணைப்பு வேகம் குறைக்கப்படும்.

தவணை முறை:
ரூ.950க்கு 200 ஜிபி வழங்கும் பிராட் பேண்ட் திட்டப்படி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.500 தவணை முறையில் செலுத்திக் கொள்ளலாம். இந்த ஆப்பர் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும்.

புதிய பிளான்கள்:
சுதந்திர தினத்தையொட்டி பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக சோட்ட பேக் என்று ரூ.220, ரூ.550, ரூ.1100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரிப்பெய்டு மொபைல்:
சோட்ட பேக்கில் அனுபவித்து வந்த பிரிப்பெய்டு மொபைல் வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 25ம் தேதி வரை ரூ.29க்கு ரீசார்ஜ் செய்து மற்ற நிறுவனங்களுக்கு போன் செய்து அளவில்லாமல் பேசி மகிழலாம்.

காம்போ ஆப்பர்:
பிஎஸ்என் நிறுவனம் தற்போது வரும் 25ம் தேதி வரை தொடரும் வகையிலும் காம்போ ஆப்பரை அறிவித்துள்ளது. இதில் பிஎஸ்என் பிரிப்பெய்டு வாடிக்கையாளர்கள் 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களை பெற முடியும்.

கேரளாவுக்கு மட்டும்:
இந்த ஆப்பர்கள் அனைத்தும் கேரளாவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மட்டும் அனுபவிக்க முடியும் வேறு எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் அனுபவிக்க முடியாது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications