பிஎஸ்என்எல்-ன் பூஜ்ய-குரல் கட்டண திட்டம், இதுதான் 'நிஜமான' அதிரடி திட்டம்..!
சமீபத்திய அதிரடி சலுகை திட்டம் தான் பிஎஸ்என்எல் வலனாகும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் கட்டண திட்டங்கள். இந்த பி எஸ் என் எல் திட்டமானது வரும் ஜனவரி 2017 முதல் அறிமுகமாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் இலவச அழைப்புகளை மிகவும் விரும்புகின்றனர் என்பதை ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளின் மூலம் அறிந்துகொள்ளப்பட இந்த நடவடிக்கையை பிஎஸ்என்எல் எடுத்துள்ளது.
பிஎஸ்என்எல்-ன் இந்த சலுகையில் சரியாக என்ன வழங்கப்படுகிறது..? ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிக மலிவான விகித கட்டணங்களை வழங்கி வருகின்ற நிலையில் பிஎஸ்என்எல் எம்மாதிரியான சேவையை வழங்க இருக்கிறது என்பதை பற்றிய தொகுப்பே இது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இலவச வாய்ஸ் கால்கள் :
அனைத்து பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஒருவொரு பெரிய சலுகையாகும். ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டும் 4ஜி சார்ந்த விடயங்களில் மிகவும் வேறுபட்டவைகள். இருப்பினும் கூட, பிஎஸ்என்எல் இந்தியாவில் இன்னும் பல நகரங்களில் அவர்களது 4ஜி சேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதுள்ளது.

எப்படி..?
ரிலையன்ஸ் ஜியோ தனது இலவச குரல் அழைப்புகளை வோல்ட் (VoLTE) பயன்படுத்தி நிகழ்துகிறது. ஆனால் இப்போது வரையிலாக, பிஎஸ்என்எல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால்ஸ் சேவையை எப்படி, எவ்விதத்தில் வழங்க இருக்கிறது என்பது பற்றிய தகவல் இல்லை.
புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாத்தியமில்லை :
முன்னர் குறிப்பிட்டப்படி, ரிலையன்ஸ் ஜியோ குரல் அழைப்புகளை வோல்ட் மூலம் வழங்குகிறது அம்முறை பிஎஸ்என்எல்-க்கு சாத்தியமில்லை என்பதால் மாறாக பிஎஸ்என்எல் நிறுவனம், வழக்கமான குரல் அழைப்புகள் வழங்க வேண்டும்,. அப்படி வழங்கினால் பைத்தியக்காரத்தனமான ஒரு முடிவாய் இருக்கும்.

2ஜி மற்றும் 3ஜி :
பிஎஸ்என்எல் எப்போதுமே இலவச குரல் தரவு திட்டங்களை வழங்குகியதில்லை என்றபோதிலும் வழங்கும் போது நிச்சயமாக அது 2ஜி மற்றும் 3ஜி பயனர்களையும் சென்றடையும் ஏனெனில் பின்எஸ்என்எல் நிறுவனதி த்தால் இப்போதே வோல்ட் (VoLTE) ஆதரவு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முடியாது.
புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிராட்பேண்ட் பயனர்களுக்கும் :
பிஎஸ்என்எல் நிருபத்தின் இயக்குனர், ஸ்ரீவத்சவா பயனர்கள் பெரும்பாலான நேரம் வீட்டில் தான் தங்கள் நேரத்தை அதிகம் செலவழிகின்றனர் என்று நம்பிக்கை தெரிவைத்துள்ளார். எனவே, இந்த சலுகை பிராட்பேண்ட் பயனர்களுக்கும் திறக்கப்படும்.

ரூ.2 முதல் ரூ.4 :
பிஎஸ்என்எல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் அதிக அளவிலான போட்டியை நிகழ்த்த விரும்பும் நோக்கில் பூஜ்ய- குரல் கட்டண திட்டங்களின் விலையை ரூ.2/- முதல் ரூ.4/-ஆக இருக்கலாம் என்றும் இத்திட்டமானது ஜனவரி தொடக்கத்தில் இருந்து சேவை தொடங்கலாம் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :
இந்தியாவில் கிடைக்கும் அதிவேக இண்டர்நெட் திட்டடங்களின் பட்டியல்.!


Click it and Unblock the Notifications