பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டு வந்த புதிய வசதி.! என்னென்ன சிறப்பு தெரியுமா?
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய வசதிகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. பின்பு கடந்த சில மாதங்களில் அதிக வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கனிசமாக வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ செயலியை புத்தம் புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்து இருக்கின்றனது, பின்பு புதிய மை பிஎஸ்என்எல் செயலியில் மிக எளிமையான யூசர் இன்டர்பேஸ் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அப்டேட் ஆனது செயலியில் ரிவார்ட்ஸ், 4ஜி ஹாட்ஸ்பாட், ஸ்பெஷல் ஆஃபர் மற்றும் ஃபேன்சி நம்பர் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் பாரத் ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்வதற்கான வசதியும் புதிய செயலியில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் பாரத் ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்வதற்கான வசதியும் இந்த புதிய செயலியில் வழங்கப்பட்டு இருக்கிறது.

பின்பு ஒன் கிளிக் பில் பே ஆப்ஷன் வசதியும் வழங்கப்பட்டள்ளது, இதானல் பயனர்கள் எளிமையாக பில் கட்டணம் செலுத்துவது, தங்களின் சலுகையை மாற்றிக் கொள்வது போன்றவற்றை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய பலன்களை பெற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் விங்ஸ், மை பிஎஸ்என்எல் டியூன்ஸ், பிஎஸ்என்எல் வைபை, பிஎஸ்என்எல் 4ஜி பிளஸ் ணற்றும் மொபிக்விக் செயலியை பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது.

- இதை பயன்படுத்த முதலில் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும்.
- மேலும் பெயர், மொபைல், மின்னஞ்சல் வாட்டார மற்றும் பயனர் குறியீடு போன்ற விவரங்களை பதிவிட்டு நெக்ஸ்ட்பட்டனை கிளிக் செய்தல் வேண்டும்.
- இனி லாக்-இன் செய்து மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
- பின்பு பேன்சி நம்பர், ஒன் கிளிக், பே பில்ஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் நாடு முழுவதும் 4ஜி சேவைகளை வழங்க முடியாத காரணத்தினால் இந்த டெலிகாம் நிறுவனம் பெரிய அளவிலான வருவாய் பாதிப்பை சந்தித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். ஆனாலும் இந்நிறுவனம் அதை ஈடுசெய்யவும், நிறுவனத்தின் 3ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்தி மக்களை ஊக்குவிக்கவும், பிஎஸ்என்எல் மலிவான திட்டங்களையும் அட்டகாசமான சலுகைகளையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி மேலுமொரு அட்டகாச சலுகை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதாவது பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ஒரு புதிய சலுகையின் வதிகளைப் பின்பற்றி ரீசார்ஜ் செய்யும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கூடுதல் டாக் டைமை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள. சுருக்கமாக கூறவேண்டும் என்றால், இந்த புதிய சலுகையின் கீழ் கூடுதலாக ஒருவர் 20சதவிகிதம் வரை டாக் டைம்மை பெறுவார்கள், அதன்படி பயனர்கள் ரூ.600 -வரை கூடுதல் பேச்சு நேரத்தை பெறமுடியும்.


Click it and Unblock the Notifications