பிஎஸ்என்எல் வழங்கும் சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ.29-ல் வியக்கவைக்கும் சலுகை.!
பிஎஸ்என்எல் புதிய 'ஃப்ரீடம் ஆஃபர் சோட்டா பேக்' அறிமுகம் செய்துள்ளது, இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா சேவை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் புதிய 'ஃப்ரீடம் ஆஃபர் சோட்டா பேக்' அறிமுகம் செய்துள்ளது, இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா சேவை வழங்குகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.9 மற்றும் ரூ.29 சிறப்பு சலுகை பேக்கள் மாநில அரசு டெல்கோ அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 10 இல் இருந்து ' ஃப்ரீடம் ஆஃபர் - சோட்டா பேக்' திட்டம் இந்தியாவில் பயனர்களுக்கு கிடைக்குமென்று அறிவித்திருக்கிறது.

ரூ.9 சோட்டா பேக்ன்படி பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சந்தாதார்கள்(டெல்லி மற்றும் மும்பை தவிர்த்து), வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகள் மற்றும் 80Kbps வேகத்தில் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெற முடியும். இந்த பேக் ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 25 வரை இந்த சோட்டா பேக் கிடைக்கும்.
ரூ.29 ஃப்ரீடம் ஆஃபர் சோட்டா பேக் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சந்தாதார்கள்(டெல்லி மற்றும் மும்பை தவிர்த்து) வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகள் மற்றும் 80Kbps வேகத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-கள் வழங்குகிறது. இந்த சோட்டா பேக் 7 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகும். ரூ. 29 திட்டத்திற்கான நன்மைகள் ஆகஸ்ட் 25 வரை மாற்றமடையாது, அன்றாடத் டேட்டா வரம்பு ஒரு நாளைக்கு 1 ஜிபி வழங்கப்படும். அதே நேரத்தில் வாரத்திற்கு 300 எஸ்எம்எஸ் என்ற வரம்புடன் வருகிறது.

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.27 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்தது, இது சந்தாதார்களுக்கு ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவழங்குகிறது. இது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் வரம்புகளுடன் வருகிறது.
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிக லாபத்தை அளிப்பதற்காக அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு பட்ஜெட் திட்டங்களுக்கு விரைவான பல மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த புதிய ஃப்ரீடம் ப்ரீபெய்ட் திட்டத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் சந்தைக்கு பல மலிவான சலுகையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.


Click it and Unblock the Notifications