எவ்ளோ டேட்டா வேணுமோ யூஸ் பண்ணிக்கோங்க.. வெறும் ரூ.500-க்கு அறிமுகமான புதிய BSNL பிளான்!
பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் குறைந்த விலையில் திட்டங்களை அறிமுகம் செய்தாலும் இன்னும் 4ஜி சேவையை வழங்கவில்லை, விரைவில் இந்நிறுவனம் 4ஜி சேவையை வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.499 விலையில் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய திட்டம் ரூ.499 பைபர் பேசிக் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ449 திட்டம் தான் இப்போது பெயர் மாற்றப்பட்டு ரூ.499 பைபர் பேசிக் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் ரூ.449 திட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. இப்போது ரூ.449 திட்டம் பைபர் பேசிக் நியோ என்று அழைக்கப்படுகிறது. தெளிவாகக் கூறவேண்டும் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இப்போது ரூ.499 பைபர் பேசிக் திட்டம் மற்றும் ரூ.449 பைபர் பேசிக் நியோ என்ற இரண்டு திட்டங்களும் உள்ளன. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.499 பைபர் பேசிக் திட்டம்
தற்போது அறிமுகம் செய்யப்பட்ட ரூ.499 பைபர் பேசிக் திட்டம் ஆனது 40Mbps வேகத்தில் 3.3TB வரையிலான டேட்டா மறறும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவு டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். அதேபோல்
பயனர்கள் இந்த திட்டத்தைப் பெறுவதற்கு செக்யூரிட்டி டெப்பாசிட்டாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனாலும் இப்போது இந்த திட்டத்தில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரூ.449 பைபர் பேசிக் நியோ திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.449 பைபர் பேசிக் நியோ திட்டம் ஆனது 30Mbps வேகத்தில் 3.3TB வரையிலான டேட்டா மறறும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவு டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைந்து விடும். அதேபோல் பயனர்கள் இந்த திட்டத்தை பெறுவதற்கு செக்யூரிட்டி டெப்பாசிட்டாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.

விரைவில் நீக்கம்..
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் ரூ.775 மற்றும் ரூ.275 பிராட்பேண்ட் திட்டங்களை நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்ததிட்டங்கள் சுதந்திர தினத்தை ஒட்டி விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் 4ஜி
அதேபோல் சமீபத்தில் பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சரியான தேதியைக் குறிப்பிடப்படவில்லை.

அதாவது ட்விட்டரில் பயனர் ஒருவர் பிஎஸ்என்எல் 4ஜி எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இவருக்கு பதில் அளித்த பிஎஸ்என்எல் இந்தியா, சரியான தேதியை குறிப்பிடுவது கடினமான விஷயம். இதற்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்து இருக்கிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications