பிஎஸ்என்எல்-ன் ரூ.191 அறிமுகம்: அன்லிமிடெட் வாய்ஸ் + டேட்டா.!
ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.191/-ன் நன்மைகள் என்ன, இதன் செல்லுபடி காலம் என்ன.? நிறுவனத்தின் இதர சமீபத்திய அறிவிப்புகள் என்னென்ன.? என்பதை விரிவாக காண்ணோம்.
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தெலுங்கானா பிராந்தியத்தில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ.191/- என்கிற கட்டணத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்தை தொடர்ந்து இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் நிலவும் உயர்நிலை கட்டண யுத்தத்தின் விளைவாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் இந்த அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளது.
ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.191/-ன் நன்மைகள் என்ன, இதன் செல்லுபடி காலம் என்ன.? நிறுவனத்தின் இதர சமீபத்திய அறிவிப்புகள் என்னென்ன.? என்பதை விரிவாக காண்ணோம்.

குரல் அழைப்பு, தரவு மற்றும் எஸ்எம்எஸ்
இந்த பிஎஸ்என்எல் ரூ.191/- திட்டமானது குரல் அழைப்பு, தரவு மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட எல்லா வகையான நன்மைகளையும் வழங்குகிறது. நிறுவனத்தின் படி, வாய்ஸ் எஸ்டிவி 191 என்று அழைக்கப்படும் இந்த திட்டமானது அறிமுகம் செய்யப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியானதாக இருக்கும்.

செல்லுபடி
அதாவது 28 நாட்கள் செல்லுபடியாகும் விளம்பர வாய்ப்பான ரூ.191/- ஆனது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, 2018-ஆம் ஆண்டின் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 வரை ரீசார்ஜ் செய்து கொள்ள கிடைக்கும் என்று பொருள். அந்த 90 நாட்கள் முடிந்த பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் இதன் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்கலாம் அல்லது திட்டத்தை முழுமையாக அழிக்கலாம்.

வரம்பற்ற குரல் அழைப்பு
இதன் நன்மைகளை பொறுத்தமட்டில், நிறுவனத்தின் வீட்டு வட்டாரத்தில் எந்தவொரு பிணையத்திற்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. துரதிருஷ்டவசமாக, இந்த திட்டம் இலவச ரோமிங் குரல் அழைப்புகளை வழங்கவில்லை.

ஒரு நாளைக்கு 1 ஜிபி
மேலும் இந்த திட்டமானது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. வழங்கப்படும் தரவு நன்மையின்வரம்பை எட்டிய பின்னர் இணைய வேகமானது 80கேபிபிஎஸ் ஆக குறையும். இந்த வேகமானது, வாட்ஸ்ஆப் செய்திகளை அனுப்ப மற்றும் பெற போதுமானதாக இருக்குமென்பதில் சந்தேகம் இல்லை.

இலவச எஸ்எம்எஸ்
மேலும், ரூ.191/- பேக் ஆனது அதன் வட்டாரங்களுக்குளான எந்த நெட்வர்க் உடனாகவும் 300 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இதன் பொருள் வாடிக்கையாளர்கள் மற்றொரு வட்டத்தில் உள்ள ஒரு நபருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும்.

ரூ.187/-ன் நன்மைகள்
இந்த வாய்ஸ் எஸ்டிவி 191 உடன், பிஎஸ்என்எல் நிறுவனமானது ரூ.187/- போன்ற இன்னும் சில சிறப்பான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ரூ.187/- ஆனது ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

ரூ.459/- மற்றும் ரூ.551/-ன் நன்மைகள்
மேலும், பிஎஸ்என்எல் ரூ.459/- மற்றும் ரூ.551/- போன்ற திட்டங்களானது, முறையே நாளொன்றுக்கு 1 ஜிபி அளவிலான தரவு மற்றும் நாள் ஒன்றிற்கு 5ஜிபி அளவிலான தரவு உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை (நாடெங்கிலும்) முறையே 71 நாட்களுக்கும் மற்றும் 90 நாட்களுக்கும் வழங்குகிறது.

ரூ.62/- மற்றும் ரூ.81/-ன் நன்மைகள்
பிஎஸ்என்எல் ரூ.62/- மற்றும் ரூ.81/- என்கிற இரண்டு குரல் அழைப்பு திட்டங்களை பொறுத்தமட்டில், முறையே 9 நாட்களுக்கும் 14 நாட்களுக்கும் செல்லுபடியாகும் வண்ணம் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் உடனான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களை உடனுக்குடன் பெற தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications