பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கட்டிட உரிமையாளர்: காரணம் என்ன தெரியுமா?
பிஎஸ்என்எல் நிறவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் இந்நிறுவனம் அன்மையில் அறிவித்த மலிவு விலை திட்டங்கள் அனைத்தும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

அதிக பரபரப்பு ஏற்பட்டது
இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாடயை பாக்கி தராததால் பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டார், இதனால் அப்பகுதியில் அதிக பரபரப்பு ஏற்பட்டது.

பிஎஸ்என்எல் அலுவலகம்
தாணிக்கோட்டகம் எனும் பகுதியில் நெடுஞ்செழியன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தான் கடந்த 15வருடங்களாக பிஎஸ்என்எல் அலுவலகம் வாடகையில் இயங்கி வருகின்றது. இந்த அலுவலகத்திற்கு அதிகளவு மக்கள் வந்து செல்வார்கள்.

எந்தவித பயனும் இல்லை
மேலும் கடந்த 5மாதமாக இந்த பிஎஸ்என்எல் இயங்கி வரும் கட்டிடத்திற்கு வாடகை கொடுக்காமல் நிர்வாகம் இழுத்தடித்து
வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருடன் பலமுறை நெடுஞ்செழியன் பேச்சுவார்த்தை
நடத்தியும் எந்தவித பயனும் இல்லை என்று கூறப்படுகிறது.

வெளியே நிற்க வேண்டிய நிலை
தொடர்ந்து இதனால் ஆத்திரமடைந்த கட்டிட உரிமையாளர் நெடுஞ்செழியன் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு பூட்டு போட்டார். இதனால் அந்த அலுவலகத்துக்கு வந்த ஊழியர்கள் அதிக நேரம் வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சமாதானப் பேச்சுவார்த்தை
மேலும் பிஎஸ்என்எல் ஊழியர்கள், நெடுஞ்செழியனுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், பின்பபு விரைவில் பாக்கித் தொகையை அளித்து விடுவதாகவும்; உறுதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications