பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ள பிராட்பேண்ட் திட்டம்.! முழு விவரம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து மலிவு விலையில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் பிஎஸ்என்எல் குறைந்த விலையில் ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்நிறுவனம் தற்போது ரூ.329 விலையில்
ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.329 ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் ஆனது 1000 ஜிபி டேட்டாவை, 20 Mbps வேகத்தில் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஃபிக்சட் லைன் வாய்ஸ் அழைப்பு இலவசமாக வழங்கப்படும். இதுதவிர முதல் மாத கட்டண தொகையில் 90 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இதற்கு முன்பு குறைந்த விலை ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமாக பிஎஸ்என்எல்-லின் ரூ.449 திட்டம் இருந்தது. இந்த திட்டத்தில் 30Mbps வேகத்தில் 3.3டிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்த ரூ.449 திட்டம் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் நாட்டின் சில மாநிலங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் வலைத்தளத்திற்கு சென்று இந்த திட்டம் தங்கள் இடங்களுக்கு அமலில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் 18 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி வேலிடிட்டி 150 ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 18 நாட்களுக்கு பிறகு நீங்கள் அழைப்புகளைச் செய்ய விரும்பினால், வேறு ஒரு திட்டத்தில் டாப்-அப் செய்ய வேண்டும்.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 197 ப்ரீபெய்ட் திட்டத்தில் 18 நாட்களுக்கு மட்டுமே டேட்டா மற்றும் குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 150 நாட்களுக்கு வேலிடிட்டி உள்ளது. எனவே இதன் மூலம் உள்வரும் அழைப்புகள் (incoming calls) 150 நாட்களுக்கு கிடைக்கும். கம்மி விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி மட்டும் தேடும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.118 மற்றும் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டங்கள்
பிஎஸ்என்எல் எஸ்டிவி-118 என்று கூறப்படும் ரூ.118 திட்டம் ஆனது 0.5 டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த ரூ.118 திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் STV_147 என்று கூறப்படும் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 10ஜிபி டேட்டா, BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளிட்ட சில நன்மைகளை மட்டுமே வழங்குகிறது. இந்த ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.185 திட்டம்
பிஎஸ்என்எல் எஸ்டிவி-185 என்று கூறப்படும் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 100 எஸ்எம்எஸ், BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளட்ட சில நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த டேட்டா உபயோகத்திற்கு தினசரி வரம்பு இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இணைய வேகம்80 கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் BSNL ட்யூன்ஸ் மற்றும்EROS now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலுடன் வருகிறது பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications