பிஎஸ்என்எல் பம்பர் ஆப்பர் அதிரடி நீட்டிப்பு: 2.21ஜிபி கூடுதல் டேட்டா.!
இந்நிலையில், தற்போது இந்த ஆப்பர் ஜூன் 30 ஆம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் டேட்டா ஆப்பரை ரூ.186 முதல் ரூ.1699 வரையுள்ள ரீசார்ஜ்கள் மூலம் பெறலாம்.
பி.எஸ்.என்.எல் நிறுவனம், தனது பம்பர் ஆப்பர் சேவையை ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த ஆப்பர்மூலம் குறிப்பிட்ட பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக 2.21ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. ஜனவரி மாதம், இந்த ஆப்பர்ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த ஆப்பர் ஜூன் 30 ஆம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் டேட்டா ஆப்பரை ரூ.186 முதல் ரூ.1699 வரையுள்ள ரீசார்ஜ்கள் மூலம் பெறலாம்.

2.21 ஜிபி கூடுதல் டேட்டா:
இந்த பம்பர் ஆப்பர் மூலம், ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 மற்றும் ரூ.1699 ஆகிய ப்ரீபெய்டு பேக்குகளை ரீசார்ஜ் செய்வோருக்கு 2.21ஜிபி கூடுதல் டேட்டா கொடுக்கப்படும்.

ஜூன் வரை நீட்டிப்பு:
இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடியவிருந்த இந்த தள்ளுபடியை, ஏப்ரல் 30 வரை முதலில் நீட்டித்தது பி.எஸ்.என்.எல். இப்போது ஜூன் 30 வரை இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

3.7 ஜிபி டேட்டா கிடைக்கும்:
இரண்டாவது முறையாக இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது மூலம், ரூ.186 மற்றும் ரூ.429 பேக்குகளை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3.21ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல ரூ.485 மற்றும் ரூ.666 பேக்குகளை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3.7ஜிபி டேட்டா கிடைக்கும்.

தமிழ்நாடு வட்டாரம்:
மேலும், ரூ.1699 பேக் மூலம் ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 4.21ஜிபி டேட்டா கிடைக்கும். தற்போதைக்கு இந்த ஆப்பர் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டத்துக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications