பிஎஸ்என்எல் ரூ.47 திட்டம் அறிமுகம்: 28 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மைகள் தெரியுமா?

|

பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் தான் இருக்கிறது. இந்நிலையில் மிகவும் மலிவான விலையில் அதிக நன்மைகளுடன் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

 பிஎஸ்என்எல் நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனம்

தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.47 என்கிற புதிய பர்ட்ஸ் (எஃப்ஆர்சி) ரீசார்ஜ் திட்டத்தை தான் அறிமுகம் செய்துள்ளது. இந்தFRC 47 என்ற நிறுவனத்தின் பர்ஸ்ட் ரீசார்ஜ் ஆனது புதிய பயனர்களுக்கே மட்டுமே கிடைக்கும் என அந்நிறுவனத்தின் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டம் 28 நாட்களுக்கு குரல் அழைப்பு

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் 28 நாட்களுக்கு குரல் அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளுடன் வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தனியார் நிறுவனங்களே இதுபோன்ற கம்மி விலையில் அதிக நன்மைகளை தரும் திட்டங்களை அறிமுகம் செய்யவில்லை. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ரூ.47 என்கிற புதிய பர்ட்ஸ் (எஃப்ஆர்சி) ரீசார்ஜ் திட்டத்தைஅறிமுகம் செய்துள்ளது

அசத்தலான அம்சங்களுடன் லெனோவா ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்.!அசத்தலான அம்சங்களுடன் லெனோவா ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்.!

110-120 மில்லியனுக்கும் அதிகமான  சந்தாதாரர்களின் எண்ணிக்கை

110-120 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களின் எண்ணிக்கை

அதாவது இதுபோன்ற புதிய திட்டங்களை அறிமுகம் செய்வதால் அதிக பயனர்களை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நினைத்து தான் பிஎஸ்என்எல் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக தற்போது இருக்கும் 110-120 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதுபோன்ற திட்டங்களை கொண்டுவருகிறது.

எஃப்ஆர்சி 47-இன் நன்மைகள்

எஃப்ஆர்சி 47-இன் நன்மைகள்

பிஎஸ்என்எல் எஃப்ஆர்சி 47-இன் நன்மைகள் பொறுத்தவரை, எல்.எஸ்.ஏ மற்றும் எம்.டி.என்.எல் ரோமிங் பகுதிகள் (மும்பை, டெல்லி) உள்ளிட்ட தேசிய ரோமிங்கில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன் (ஆன்-நெட் / ஆஃப்-நெட் /லோக்கல் / எஸ்.டி.டி) வருகிறது. பின்பு இந்த திட்டம் 14ஜிபி டேட்டா நன்மை, 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது.

திட்டமாகும் இதன்

குறிப்பாக FRC 47 ஒரு ஆரம்ப திட்டமாகும் இதன் பிறகு வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை செயலில் வைத்திருக்க மற்றொரு ரீசார்ஜை செய்ய வேண்டும். பின்பு FRC 47 ஆனது மார்ச் 31, 2021 வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்றும் இது ஒரு விளம்பர சலுகை என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிகாம் டால்க் வலைத்தளம்

மேலும் டெலிகாம் டால்க் வலைத்தளம் அறிவித்துள்ள தகவலின்படி, இந்த புதிய திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டங்களில் உள்ள புதிய பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் அனைத்து வட்டங்களிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL FRC 47 Plan Launced: 28 Days Validity: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X