பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த புதிய சலுகை: 5ஜிபி டேட்டா இலவசம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது.

கடந்த சில மாதங்களில் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் அதிகளவு வாடிக்கையாளர்களை இழந்துள்ளது, அதேசமயம் பிஎஸ்என்எல், ஜியோ போன்ற நிறுவனங்கள் அதிகளவு வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தனது Work@Home பிராட்பேண்ட் திட்டத்தின் வேலிடிட்டியை மீண்டும் டிசம்பர் 8 வரை நீட்டித்துள்ளது.குறிப்பாக Work@Home பிராட்பேண்ட் திட்டத்துடன் பிஎஸ்என்எல் ரூ.499 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள் கிடைக்கும் நாட்களையும் நீட்டித்துள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் தனது சென்னை தளத்தில் ஒரு Work@Home திட்டத்தை வெளியிட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்தை தவிர அனைத்து வட்டங்களிலும் Work@Home விளம்பர பிராட்பேண்ட் திட்டம் டிசம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த "Work@Home" விளம்பரகால பிராட்பேண்ட் திட்டம் ஆனது ஆரம்பத்தில் மார்ச் 19-ம் தேதி ஏப்ரல் 19வரை ஒரு மாத செல்லுபடியாகும் வகையில் தொடங்கப்பட்டது.

குறிப்பாக Work@Home பிராட்பேண்ட் திட்டம் ஆனது அனைத்து பயனர்களுக்கும் தினசரி 5ஜிபி டேட்டாவை 10 Mbps வேகத்தில் வழங்குகிறது. பின்பு ஒரு நாளில் 5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, வேகம் 1 Mbps வரை குறையும். மேலும் இந்த திட்டம் இலவசம் எனவும், இதற்கு நிறுவல் அல்லது பாதுகாப்பு வைப்பு தொகை எதுவும் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிவந்த டெலிகாம் டாக் வலைதளத்தின் தகவல்படி கொல்கத்தா,சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தில் 300ஜிபி பிளான் CS337 என அழைக்கப்படும் ரூ.499 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலத்தையும் பிஎஸ்என்எல் நீட்டித்துள்ளது. பின்பு இந்த திட்டம்முன்னதாக நாடு முழுவதும் தேர்வுசெய்யப்பட்ட வட்டங்களில் 9வரை நீட்டிக்கப்பட்டது.

மேலும் இந்த திட்டம் 40Mbps வரை வேகம் வழங்குகிறது எனவும், பின்பு 300GB வரை தரவுடன் வருகிறது. தரவு வரம்பு தீர்ந்தவுடன், பயனர்கள் 1Mbps வேகத்துடன் இணையத்தில் உலாவலாம் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வரம்பற்ற அழைப்புகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications