பிஎஸ்என்எல் நிறுவனம் செய்த அதிரடி முடிவு.! ப்ரீபெய்ட் திட்டத்தில் திடீர் மாற்றம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டத்திலிருந்து இரண்டு திட்டங்களை நீக்கியுள்ளது. அதேபோல் அதன் சிக்ஸர் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டத்திலிருந்து இரண்டு திட்டங்களை நீக்கியுள்ளது. அதேபோல் அதன் சிக்ஸர் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ரூ.2,099 மற்றும் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2,099 மற்றும் ரூ.999 என்ற இரண்டு நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை தற்பொழுது அதன் ப்ரீபெய்ட் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. அன்லிமிடெட் கால்லிங் சேவையுடன், தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கிவந்த இந்த திட்டம் இனி பயனர்களுக்குக் கிடைக்காது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்
அதேபோல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் சிக்ஸர் திட்டமான ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை 122 நாட்களிலிருந்து 134 நாட்களாக மாற்றம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனருக்குத் தினமும் 3.75 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் இலவச ரோமிங் வழங்கப்படுகிறது.

புதிய ரூ.56 ப்ரீபெய்ட் திட்டம்
இத்தட்டுடன் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய ரூ.56 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி தினமும் 1.5 ஜிபி டேட்டா 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படும்.

முக்கிய குறிப்பு
முக்கிய குறிப்பு இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்லிங்எதுவும் வழங்கப்படவில்லை மற்றும் இது தமிழ்நாட்டுப் பயனர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications