அம்பானி மகிழ்ச்சி: பிஎஸ்என்எல் நிறுவனம் 'அந்த" சலுகைய நிறுத்தியது.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்த பல்வேறு பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக அதிரடி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்து வருகிறது, குறிப்பாக மக்கள் எதிர்பார்க்காத அட்டகாசமான சலுகையை வழங்கி வருகிறது இந்நிறுவனம்.

ஒரு அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது
சமீபத்தில் பிஎஸ்என்எல் அதன் சேவைகளுக்கான இலவச சந்தாவை அறிமுகப்படுத்தியது, ழவவ நன்மைகளைச் சேர்த்தது, பின்பு அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மைகளையும் வழங்கியது. அதனை தொடர்ந்து இப்போது பிஎஸ்என்எஸ் நிறுவனம் ஒரு அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடையாது.!
டெலிகாம் டாக் வலைதளத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், பிஎஸ்என்எல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் ஆனது நிறுத்திக்கொள்ளப்பட்டது, அதாவது பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.186, ரூ.428, ரூ.485, ரூ.666 மற்றும் ரூ.1,6999-ஆகிய திட்டங்களில் இனிமேல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்காது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

நான்கு மணி நேரத்திற்க்கான இலவச அழைப்புகள் மட்டுமே
இந்த நடவடிக்கையின் மூலம் பயனர்களுக்கு தினசரி 250நிமிட இலவச வெளிச்செல்லும் நிமிடங்கள் மட்டுமே அணுக கிடைக்கும், அதாவது ஒரு பயனரால் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்க்கான இலவச அழைப்புகள் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அர்த்தம்.

வினாடிக்கு 1பைசா என்கிற கட்டணம்
அறிவிக்கப்பட்டுள்ள 250நிமிடங்கள் என்கிற தினசரி வரம்பு முடிந்ததும்,பயனர்களுக்கு அடிப்படை கட்டணத்தின்படி அழைப்புகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி வினாடிக்கு 1பைசா என்கிற விகிதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நாளுக்கு முக்னோக்கி செல்லாது
அறிவிக்கப்பட்ட இந்த வரம்பானது நள்ளிரவு வரை இருக்கும், அதன்பின்பு தினசரி வரம்பு மீட்டமைக்கப்படும், குறிப்பாக இலவசமாக கிடைக்கும் 250நிமிடங்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அது அடுத்த நாளுக்கு முக்னோக்கி செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது
அழைப்பு நன்மைகளை பொறுத்தவரை ஜியோ நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது, குறிப்பாக அனைத்து திட்டங்களிலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்கி வருகிறது இந்நிறுவனம். ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களுகம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்கிவந்த நிலையில் பிஎஸ்என்எல் மட்டும் இப்போது அதை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications